Skip to main content

அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் யாஷ்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

அரபிக் கடலில் சமீபத்தில் உருவான டவ்தே புயல் கர்நாடகா, கோவா, மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைத் தாக்கியது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே கணித்திருந்தது. இந்த புயலுக்கு யாஷ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், அந்தப் புயலால் மேற்கு கடலோர மாவட்டங்களில் பரவலான மழை இருக்குமென்றும், அந்தப் புயல் ஒடிசா - மேற்கு வங்கத்திற்கிடையே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பரவலான மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  
 

சார்ந்த செய்திகள்