Skip to main content

ப.சிதம்பரம் வீட்டில் சுவரேறி குதித்த சிபிஐ அதிகாரிகள்!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த நிலையில், அவர் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

 

 CBI officers jumping into the house of P Chidambaram


இந்நிலையில் அவரை பின்தொடர்ந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றனர். வீட்டுக் கதவு பூட்டப்பட்டதால் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர்.

கதவை தட்டியும் திறக்காததால் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். தற்போது விசாரணைக்கு சென்றுள்ள அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீட்டின் தரை தளத்தில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் வீட்டுக்குள் ப.சிதம்பரத்துடன் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித், கபில் சிபல் ஆகியோர் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்