Skip to main content

பாஜக... பதவி வெறியும் ஊழல் ஒழிப்பும்!

Published on 31/10/2019 | Edited on 02/11/2019

காங்கிரஸ் பதவி வெறிபிடித்து அலைகிறது என்று கடந்த தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்தான் பொருளாதார சீர்குலைவுக்கே முழுமையான காரணம் என்றும் போகிற இடமெல்லாம் குற்றம்சாட்டினார்.

 

ஆனால், காங்கிரஸைக் காட்டிலும் அம்பானிக்கும் அதானிக்கும், விஜயமல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கும் மக்கள் பணத்தை வாரிக்கொட்டினார் மோடி. பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்துவிட்டு, நேருதான் இந்தியாவை நாசப்படுத்திவிட்டதாக கூறிக்கொண்டிருந்தார்.

 

ஊழலை ஒழிக்கப் போவதாக மார்தட்டிய மோடியும் அமித் ஷாவும் ஊழலை எப்படி ஒழித்தார்கள் தெரியுமா?  காங்கிரஸ் கட்சியிலும் பிற கட்சிகளிலும் ஊழல் முடைநாற்றமெடுத்த பழம் பெருச்சாளிகளை மிரட்டியும் விலைகொடுத்து வாங்கியும் பாஜகவில் சேர்த்துக் கொண்டார்கள்.

 

ஒரே ஒரு எம்எல்ஏவை வைத்துக்கொண்டு கூட்டணி அரசு அமைத்தார்கள். ஒரு உறுப்பினர்கூட இல்லாத மாநிலத்திலும் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி ஆட்சியையே தனதாக்கினார்கள். கட்சியே இல்லாத மாநிலத்தில்கூட இன்னொரு கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி எதிர்க்கட்சி ஆனார்கள். ஆட்சி அமைப்பதற்காக 15 எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குறுக்கு வழியில் ஆட்சி அமைத்தார்கள். சொந்தக் கட்சியைச் சேர்ந்த கோஷ்டிகளையே சமாளிக்க முடியாமல் துணை முதல்வர் பதவியை வாரிக்கொடுத்து சரிக்கட்டுவார்கள். அடுத்த கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பதாக குற்றம் சாட்டுவார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாத கட்சி என்பார்கள். தமிழ்நாட்டில் தனது கட்சிக்கு இரண்டு மாதங்களாக ஒரு தலைவரை அறிவிக்க முடியாமல் இருப்பார்கள். இதெல்லாம் இருக்கட்டும்…
 

BJP PARTY MAHARASHTRA AMND HARYANA STATES ELECTION

 

பாஜகவின் பதவிவெறிக்கும், ஊழல் ஒழிப்புக்கும் சமீபத்திய சாட்சியாக மகாராஸ்டிராவும், ஹரியானாவும் மாறியிருக்கின்றன.

 

முதலில் ஹரியானாவை பார்க்கலாம்… அங்கு ஊழலை ஒழிக்க பாஜக கையாண்டிருக்கும் நடைமுறை ரொம்ப ஸ்பெஷல் ஆகும்.

 

1999ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா அந்த மாநில முதல்வரானார். அந்தக் காலகட்டத்தில் ஹரியானா மாநிலத்தில் 3 ஆயிரத்து 26 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் தகுதியில்லாத ஆசிரியர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா தேர்வுக் கமிட்டியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சீவ் குமார்தான் தேர்வு பட்டியலை மாற்றிவிட்டதாக கூறினார். இந்த ஊழல் பூதாகரமான நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, சிபிஐ விசாரிக்கும்படி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

 

இந்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவருடைய மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 53 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்து, அவர்கள் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில்தான், ஹரியானாவில் நடைபெற்ற 2019 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. முந்தைய பேரவையில் 17 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் 31 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளத்திலிருந்து பிரிந்து புதிதாகத் தொடங்கப்பட்ட ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் இந்திய தேசிய லோக்தளம் 1 இடத்திலும், சுயேச்சைகள் 8 இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

BJP PARTY MAHARASHTRA AND HARYANA STATES ELECTION

 

ஆட்சி அமைக்க 46 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் முதலில் சுயேச்சைகளை விலைக்கு வாங்கி அரசு அமைக்க பாஜக திட்டமிட்டது. காங்கிரஸோ, துஷ்யந்த் சவுதாலா கட்சி மற்றும் சில சுயேச்சைகள் ஆதரவுடன் அரசு அமைக்க திட்டமிட்டது. இந்நிலையில், சிறையில் இருக்கும் துஷ்யந்தின் அப்பா அஜய் சவுதாலாவுக்கும் தாத்தா ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும் சலுகைகளை வழங்கும் ஒப்புதலுடன் துணை முதல்வர் பதவியும் என்று பேரத்தை முடித்தது பாஜக.

 

மகனின் பதவியேற்பை பார்க்க வசதியாக அஜய் சவுதாலாவுக்கு 10 நாட்கள் லீவு உடனே வழங்கப்பட்டது. மத்தியில் இருக்கும் கட்சியால்தான் இது சாதகம் என்பதாலும், பாஜக பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதாலும்தான் துஷ்யந்த் பாஜகவுடன் கைகோர்த்தார். ஊழல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்த ஜெயலலிதாவையே குமாரசாமி என்ற நீதிபதியை நியமித்து ஒரே வார்த்தையில் விடுதலை என்று சொல்ல வைத்த அரசுதானே பாஜக அரசு? ஊழல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் சவுதாலாக்கள் இனி சிறையிலேயே இருக்க மாட்டார்கள். அடிக்கடி வெளியே வந்து அரசியலையும் நடத்துவார்கள். சிறையையே கூட ஐந்து நட்சத்திர வசதிகளோடு மாற்றுவார்கள். பாஜகவின் ஊழல் ஒழிப்புக்கும் பதவி ஆசைக்கும் இது ஒரு உதாரணம்.

 

அடுத்து  மகாராஷ்டிராவுக்கு வரலாம். மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக்கும் கடுமையான மோதல் தொடங்கிவிட்டது. தொகுதிப் பங்கீடு பேச்சு நடக்கும்போதே சிவசேனா தனது தொகுதிகளை தன்னிச்சையாக அறிவித்தது. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும் என்று அது கூறிவந்தது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் கூட்டணியையும் தொகுதிகளையும் முடிவு செய்துவிட்டன. இந்நிலையில்தான், காங்கிரஸிலிருந்தும், தேசியவாத காங்கிரஸிலிருந்தும் முக்கிய தலைகள் என கருதப்பட்டவர்களை மிரட்டி தன் பக்கம் இழுத்தது பாஜக.

 

சரத்பவார் மீது விசாரணை என்று பயங்காட்டியது. அவரோ தைரியமிருந்தால் தன்னை கைதுசெய்யும்படி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கே சென்றார். அவரை ஒன்றும் செய்யமுடியாத பாஜக அரசு, அவருடைய செல்லப்பிள்ளையான பிரபுல் படேலை மிரட்டினார்கள். அவருக்கு எதிராகவும் எதுவும் ஆதாரம் பெறமுடியவில்லை.

 

தேர்தல் முடிவுகள் பாஜகவின் அட்டூழியத்துக்கு பதிலை அளிக்கும் வகையில் அமைந்தது. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 122 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 105 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கடந்தமுறை தனித்து 63 இடங்களைப் பெற்ற சிவசேனா இந்தமுறை 56 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனாலும் இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போதுமான 145 இடங்களைத் தாண்டி 161 இடங்களைக் கைப்பற்றி இருந்தன.

BJP PARTY MAHARASHTRA AND HARYANA STATES ELECTION

 

அதேசமயம் காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. சிவசேனாவை இரண்டு கட்சிகளும் சேர்த்தால் அரசு அமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தனது அணியில் உள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் எல்லோரையும் சேர்த்தால்கூட பாஜகவுக்கு 134 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

 

எனவே, சிவசேனா எடுத்தவுடனேயே ஆட்சியில் இரண்டரை ஆண்டு பங்கு அமைச்சரவையில் சரிபாதி உறுப்பினர்கள் என்று முரண்டு பிடிக்கத் தொடங்கியது. இதை பாஜக ஏற்க மறுத்தது. இதையடுத்து மகாராஸ்டிராவில் இழுபறி நீடிக்கிறது. ஆனாலும், தனிப் பெருங்கட்சி என்ற வகையில் ஆட்சியமைக்கும் உரிமையை பாஜக கோரிவருகிறது.

 

கடந்தமுறையைப் போல மைனாரிட்டி அரசு அமைத்து காலம் தள்ளிவிடலாம் என்று பாஜக இந்த முறையும் எதிர்பார்க்கிறது. சிவசேனா இல்லாவிட்டாலும், தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று காலந்தள்ளலாம் என்று பாஜக நினைக்கிறது.

 

ஆனால், சிவசேனா முதல்வர் பதவியிலும் அமைச்சரவையிலும் பாதி இடம் கொடுக்காவிட்டால் பாஜகவுக்கு ஆதரவில்லை என்று கூறுகிறது. மாற்றுத் திட்டம் தன்னிடம் இருப்பதாக சிவசேனா கூறிவருகிறது.

 

ஊழலில் சிக்கிய சவுதாலாக்களுக்கு சலுகை காட்டுவதாக உறுதியளித்து துஷ்யந்த் ஆதரவை ஹரியானாவில் பெற்றதைப் போல மகாராஸ்டிராவில் பாஜக ஒன்றும் செய்யமுடியாது. சிவசேனாவில் அப்படி யாரும் ஊழலில் சிக்கியிருக்கவில்லை என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

 

அவருடைய பேட்டிக்கு தகுந்தபடி காங்கிரஸும் சமிக்ஞை காட்டியுள்ளது. சிவசேனா உறுதியான திட்டத்துடன் வந்தால் ஆதரிப்போம் என்று பிரிதிவிராஜ் சவான் கூறியிருக்கிறார். அதேசமயம், தேசியவாத காங்கிரஸின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அஜித் பவார், “எங்கள் அணியில் 110 பேர் இருக்கிறோம். விவசாயிகள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. அரசு அமையாத நிலையில் வலுவான எதிர்க்கட்சியாக நாங்கள் இருப்போம்” என்று கூறியிருக்கிறார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸை கலந்துகொண்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.