Skip to main content

ஏர் ஆசியா நிறுவனத்தின் புதிய தலைமை வணிக அதிகாரி...

Published on 22/11/2018 | Edited on 22/11/2018

ஏர் ஆசியா நிறுவனம், தலைமை வணிக அதிகாரியாக சஞ்சய் குமார் என்பவரை நியமித்துள்ளது. இவர் இந்த வருடம் டிசம்பர் மாதம் 3-ம் தேதி பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

aa

 

ஏர் ஆசியா நிறுவனம் கடந்த மாதம் டாடா குழுமத்தின் சுனில் பாஸ்கரன் என்பவரை நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏர் இந்தியாவுடன் இணைகிறது ஏர் ஏசியா இந்தியா! 

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

Air Asia India joins Air India!

 

டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா அதன் துணை நிறுவனமான ஏர் ஏசியா(இந்தியா)வை இணைக்க முடிவு செய்துள்ளது. 

 

கடந்த 1953- ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை 69 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜனவரி மாதம் டாடா நிறுவனம் முறையாகத் திரும்பப் பெற்றது. இதனிடையே, ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 83.67% பங்குகளை டாடா நிறுவனம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை மலேசியாவின் ஏர் ஏசியா குழுமத்தைச் சேர்ந்த ஏர் ஏசியா இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் வைத்துள்ளது. 

 

இந்த நிலையில், டாடா நிறுவனம் நான்கு விமான நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா ஏர்போர்ட்ஸ் சர்விஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் ஒரே அலுவலகத்தில் சேவையை வழங்க உள்ளன. 


 

Next Story

இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தவரா நீங்கள்? உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் உஷார்!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

 

 chennai Corporation advice to indigo-air asia passengers



தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக உள்ள நிலையில், மார்ச் 24ஆம் தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானங்களில் சென்னை வந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடந்த மார்ச் 24ம் தேதி, டெல்லியில் இருந்து சென்னைக்கு அதிகாலை 03:15க்கு கிளம்பிய இண்டிகோ விமானம் (6E-2403) மற்றும் மாலை 06:25க்கு கிளம்பிய ஏர் ஏசியா விமானம் (I5-765) ஆகிய விமானங்களில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பயணித்த நாளில் இருந்து 28 நாட்கள் உங்களை வீட்டுக்குள்ளேயே தனிமைபடுத்திக்கொள்ளுங்கள். ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.