Skip to main content

பெண்களின் வாக்குகளை கவர  8 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடியா? - எடப்பாடியின் அடுத்த பாய்ச்சல்! 

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய புதிய அறிவிப்புகளை செய்து வருகிறார். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அனைத்து தரப்பு மக்களைக் கவரும் வகையில் என்னென்ன புதிய அறிவிப்புகள், சலுகைகள் வழங்கலாம் என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கேற்ப திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

 

தமிழக விவசாயிகளின் ஆதரவைப் பெறுவதற்காக, கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்ற பயிர்க் கடன்கள் முழுவதையும் சமீபத்தில் ரத்து செய்தார். அந்த வகையில், 16 கோடியே 43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன்கள் ரத்து செய்யப்பட்டன.

 

விவசாயிகளை தேர்தலில் கவர்வதற்காக அவர்களின் பயிர்க் கடன்களை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி, பெண்களின் ஆதரவைப் பெறுவதற்காக அடுத்து ஒரு புதிய அறிவிப்பை செய்யவிருக்கிறாராம்.

 

தமிழகத்தில் தற்போது 4 லட்சத்து 30,000 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன. 20 நபர்களைக் கொண்டு இயங்கும் இந்தக் குழுக்களில் ஏழை மற்றும் நடத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் இருக்கின்றனர். ஒரு குழுவுக்கு அதிகப்பட்சமாக 10 லட்சம் ரூபாயை 11 சதவீத வட்டியுடன் வழங்கி வருகிறது கூட்டுறவு வங்கிகள். கடனை திருப்பிச் செலுத்தினால் மீண்டும் கடன் வழங்கப்படும். 

 

அந்த வகையில்,  கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தற்போது சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்று, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலுவைத் தொகையாக இருக்கும் இந்த 8 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்களின் குடும்பத்தின் ஆதரவை சட்டமன்றத் தேர்தலில் பெறமுடியும் என எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

 

இதுகுறித்து உயரதிகாரிகளுடன் விவாதித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எவ்வளவு கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது? என்ற புள்ளிவிபரங்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறார். விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்தது போல, மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யவும் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்திருப்பதாகவும், இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் கூட்டுறவுத் துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.