Skip to main content

STRENGTHக்கு ஸ்பெல்லிங் தெரியாதவரா பிரதமர் மோடி? (வீடியோ)

Published on 28/05/2018 | Edited on 29/05/2018

வளமான பாரதம், வலிமையான பாரதம் என்ற வாக்குறுதியுடன் தேர்தலைச் சந்தித்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவர் பிரதமர் மோடி. அவரது நான்காண்டு கால ஆட்சி குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், மோடியே வலிமை (STRENGTH) குறித்து பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Modi

 

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சீன அதிபர் ஜி சிம்பிங் உடன் பிரதமர் மோடி சந்தித்தார். இருநாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வுகண்டு, இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருக்கும் என சொல்லப்பட்டது.
 

வுகான் நகரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இந்தியாவின் வலிமை குறித்து விரிவாக பேசினார். வலிமையின் ஆங்கில உச்சரிப்பான STRENGTHஐக் குறிப்பிட்டு, அதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் விவரித்து பேசினார். அதில் S - ஆன்மீகம். T - பாரம்பரியம், வணிகம் மற்றும் தொழில்நுட்பம், R - உறவுமுறை, E - பொழுதுபோக்கு, A - கலை, N - இயற்கை, H - சுகாதாரத்துறை என பேசி முடித்தார். அவர் சொன்ன எழுத்துகளை இணைத்தால் STREANH என்ற அர்த்தமற்ற வார்த்தை மட்டுமே கிடைக்கும். தொடர்ந்து தனது கூற்றுக்கு விளக்கம் தரும் விதமாக S-T-R-E-N-G-T-H என உச்சரித்துவிட்டு முடித்துக்கொண்டார். 


 

உண்மையில் தெரிந்துதான் அவர் இப்படி பேசினாரா? அல்லது தனக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதை பேசிமுடித்துவிட்டு, பின்னர் அதை சரிசெய்து கொண்டாரா என்பது மோடிக்கு மட்டுமே தெரியும்.  எது எப்படியோ தன்னை வலிமையானவராக எப்போதும் காட்டிக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு, அந்த வலிமைக்கான ஸ்பெல்லிங் கூட தெரியவில்லையே என நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.