Skip to main content

சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை!!!

Published on 22/08/2018 | Edited on 22/08/2018
சென்னை டி.நகரில் எந்நேரமும் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் உஸ்மான் சாலை யார் பெயரால் அழைக்கப்படுகிறது தெரியுமா? பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் அல்லது மெட்ராஸ் பிரசிடென்ஸியில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சராகவும், பின்னர் மாகாணத்தின் தற்காலிக கவர்னராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

usman street

 
1884 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த முகமது யாகூப் சாகிப் பகதூர் என்பவரின் மகனாக பிறந்தவர் கான் பகதூர் சர் முகமது உஸ்மான். இவர்களுடைய பூர்வீகம் தஞ்சாவூர் என்று தெரியவருகிறது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.
 
 
சென்னை மாகாணத்தை பொப்பிலி ராஜா என்று அழைக்கப்படும் சர் ராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி செய்த போது அந்த அமைச்சரவையில் உஸ்மான் இடம்பெற்றிருந்தார்.  1934ம் ஆண்டு மே 16ம் தேதி சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

 


 
சென்னை மாகாண மாஜிஸ்திரேட் ஆகவும், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், சென்னை நகர செரீப்பாகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 1925 முதல் 1934 வரை சென்னை மாகாண நிர்வாகக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.  சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1942 முதல் 1946 வரை பிரிட்டிஷ் வைசிராயின் நிர்வாகக்குழுவில் உறுப்பினராக மத்திய அரசிலும் பணியாற்றினார்.

 
1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி மரணமடையும்வரை மெட்ராஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். 1925 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாகக் காரணமான அரசுக் குழுவுக்கு இவர் தலைவராக இருந்தார்.  அரசுக்கு இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கை என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்ட மிக முக்கியமான முதல் சுகாதார அறிக்கை அதுதான். உஸ்மானை யுனானி மருத்துவர் என்றே மரியாதையாக அழைப்பார்கள். இத்தனைக்கும் அவர் மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டதில்லை. அவருடைய மனைவி வழி மற்றும் பெற்றோர் வழி தாத்தாக்கள் யுனானி வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர்கள்.

 

 


 
உஸ்மானின் மிகப்பிரமாண்டமான பங்களா தேனாம்பேட்டையில் அமைந்திருந்தது. அதில்தான் அவருடைய கூட்டுக் குடும்பம் வசித்தது. அரண்மனை போன்ற அந்த பங்களா 8000 சதுர அடி பரப்பில் அமைந்திருந்தது. தோட்டத்துடன் அமைந்த அந்த பங்களாவில் வேலைக்காரர்களுக்கான குடியிருப்புகளும் அமைந்திருந்தன.
 
 
1993ம் ஆண்டு அந்த பங்களா இடிக்கப்பட்டு அபார்ட்மெண்டுகள் கட்டப்பட்டன. உஸ்மான் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அவர் தனது தம்பியின் மகனையும் மகளையும் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தத்துப் பிள்ளையை திருமணம் செய்த பாத்திமா யாகூப்பிற்கு இப்போது 76 வயது ஆகிறது. 1953ல் பாத்திமாவுக்கு திருமணம் நடைபெற்றபோது அவருடைய வயது 10. 1960 ஆம் ஆண்டு பாம்பு கடித்ததால் உடல்நலிவுற்று உஸ்மான் இறந்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவருடைய சொத்து தொடர்பான வழக்குகளுக்காக முதன்முறையாக அரசு பஸ்களில் பயணிக்க நேர்ந்ததாக சொல்கிறார் அவருடைய மனைவி பாத்திமா.

 

 

 

தனது கணவரின் பெயர் மறக்கப்பட்டுவிட்டதைக்கூட பாத்திமா பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. தனி நபருக்காக புகழ் கிடைக்கக்கூடாது. அவருடைய பணிகளைத்தான் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று உஸ்மான் சொல்வாராம்.
 

நன்றி - The Hindu
 
 
 
 
 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.