Skip to main content

வெனிசூலாவை தாக்கத் துடித்த ட்ரம்ப்! தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

அமெரிக்க அதிபராக இருக்க ஒரே ஒரு தகுதி இருந்தால் போதும். ஏதேனும் ஒரு நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் அல்லது ஒரு நாட்டில் சண்டையை மூட்டிவிட வேண்டும்.

 

அமெரிக்காவின் பொருளாதாரமே ராணுவ தளவாடங்கள் விற்பனையில்தான் இருக்கிறது. உலகம் அமைதியாக இருந்தால் எப்படி ஆயுதவியாபாரம் நடக்கும்? ஆயுத உற்பத்தியாளர்களின் கைக்கூலியாக செயல்படுபவர்கள்தான் அமெரிக்க அதிபராக இருக்க முடியும் என்பது வரலாற்று உண்மை.

 

trump

 

 

 

அந்த அடிப்படையில்தான் ட்ரம்ப்பும் செயல்பட முடியும். ஆனால், மற்ற அதிபர்களைக் காட்டிலும் ட்ரம்ப் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி என்பதை அவருடைய நடவடிக்கைகளில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

 

அவர் அதிபரானவுடன் தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் ஆளும் சோசலிஸ்ட் அரசுக்கு எதிரான கலவரத்தை தீவிரமாக தூண்டிவிட்டார். அதிபராக மதுரோ இருந்தாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், 112 உறுப்பினர்களைக் கொண்ட 13 கட்சிகள் கூட்டமைத்து அரசின் மக்கள் நலச் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தன.

 

அவர்களுடைய வன்முறைப் போராட்டத்தை அமெரிக்கா ஆதரித்தது. அந்த போராட்டத்தை அதிபர் மதுரோ ராணுவ உதவியுடன் அடக்கினார். புதிய அரசியல்சட்டத்தை இயற்ற மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். அந்தத் வாக்கெடுப்பையும் எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தை கண்டிக்காத ட்ரம்ப், அதிபர் மதுரோ அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தார். அவருடைய வங்கிக் கணக்குகளை முடக்குவதாக அறிவித்தார். எதைப்பற்றியும் கவலைப்படாத மதுரோ பொதுவாக்கெடுப்பை நடத்தி முடித்தார். அதில் அவருக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பளித்தனர்.

 

மதுரோ சர்வாதிகாரியாகிவிட்டார் என்ற ட்ரம்ப், வெனிசூலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  அவர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது, வெனிசூலா மீது போர் தொடுத்தால் என்ன என்று கேட்டு, அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

 

trump

 

5 நிமிடமே நடந்த இந்த ஆலோசனையில் அனைத்து அதிகாரிகளும் ட்ரம்ப்பின் யோசனையை ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர். வெனிசூலா மீது போர்தொடுப்பது தென்னமெரிக்காவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கும். உலக அளவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பும். தென்னமெரிக்காவில் சோசலிஸ்ட்டுகளின் எழுச்சி அதிகரித்துள்ள நிலையில் தென்னமெரிக்க கூட்டமைப்பை வலுப்படுத்தும் என்று கூறினார்கள். அப்போதும் நிலைமையின் தீவிரம் அவருக்கு புரியவில்லை. பிறகு தனித்தனியாக அதிகாரிகளிடம் உறுதி கேட்டுக்கொண்டு ஆலோசனைக் கூட்டத்தை முடித்தார் என்று 2018 ஜூலை 7 ஆம் தேதி தகவல்கள் கசிந்தன.

 

வெனிசூலா விவகாரத்தில்தான் இப்படி என்றில்லை. வடகொரியாவுக்கு எதிராக ட்ரம்ப் பேசிய யுத்தவெறிப் பேச்சுக்களையும், ட்வீட்டுகளையும் மறந்துவிட முடியாது. 1953 ஆம் ஆண்டிலிருந்து வடகொரியாவை ரவுடி நாடு என்று முத்திரை குத்தி, தென் கொரியாவை தக்கவைத்து வந்தது. தனது ராணுவ தளத்தை அமைத்து, கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டிக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் அட்டூழியத்தை காலங்காலமாக அனுபவித்த வடகொரியா ட்ரம்ப் அதிபரானதும் ஒரு முடிவோடு அணு ஆயுதத்தயாரிப்பை தீவிரப்படுத்தியது. அணு ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்து நடத்தியது. அணுகுண்டுகளை வெற்றிகரமாக வெடித்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும், குறிப்பாக அமெரிக்க நகரங்களை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை சோதித்து வெற்றிபெற்றது.

 

 

 

வடகொரியாவின் நிறுவனத் தலைவரான கிம் உல் சுங், கிம் ஜோங் இல், ஆகியோரைக் காட்டிலும் 34 வயது இளைஞரான கிம் ஜோங் உன் அமெரிக்காவை தொடர்ந்து விடாமல் மிரட்டினார். இதையடுத்து, வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா.பொருளாதார தடையை அமெரிக்கா கோரியது. வடகொரியாவை அழித்துவிடுவேன் என்றும், தரைமட்டமாக்கிவிடுவேன் என்றும் ட்ரம்ப் கொக்கரித்தார். அதுமட்டுமின்றி, கிம் ஜோங்கை குள்ளப் பன்றி என்று மோசமான வார்த்தைகளால் திட்டினார்.

 

எதைப்பற்றியும் கவலைப்படாத கிம், வடகொரியா மீது கைவைத்தால் அமெரிக்க நகரங்களை அழிப்போம் என்றும் ட்ரம்ப்புக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் கிம் ஜோங் எச்சரித்தார்.

 

இருநாடுகளின் போக்கு அமெரிக்காவிலும், கொரியா தீபகற்பத்திலும் பதற்றத்தை உருவாக்கியது. தென்கொரியா அதிபரும், சீனா அதிபரும் அமைதி முயற்சியில் ஈடுபட்டனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய செலவாக தென்கொரியா இருக்கிறது. அந்த நாட்டைக் காப்பாற்ற அமெரிக்காதான் செலவு செய்கிறது. ஆனால், அமெரிக்காவையே மிரட்டுகிற அளவுக்கு வடகொரியா ராணுவ பலத்துடன் இருக்கிறது. இது தென்கொரியா மக்களிடம் பாரம்பரிய வீர உணர்வை அதிகரிக்க உதவியது. இந்நிலையில்தான் தென்கொரியாவுடன் தீடீரென்று நட்புக்கரத்தை நீட்டினார் கிம். தேவைப்பட்டால் ட்ரம்ப்புடன் பேசவும் தயார் என்று கூறினார்.
 

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.