Skip to main content

சாலையோரம் கிடக்கும் விவசாயக் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

Natural fertilizer


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கரும்பு, நெல், சோளம், கம்பு, காய்கறிகள் மற்றும் பூ வகைகள் என பல்வேறு விதமாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.  
 


இந்நிலையில் தற்போது விருத்தாசலம் பகுதியில் எள் சாகுபடி அறுவடை தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. அதனால் அறுவடை செய்த எள் செடியில் இருந்து, எள்ளைப் பிரித்தெடுப்பதற்காக, விவசாயிகள் வெப்பம் அதிகமாகக் கிடைக்கக் கூடிய களம் மற்றும் நெடுஞ்சாலைகளில் உலர்த்துகின்றனர். அவ்வாறு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை பிரித்தெடுப்பதற்காக உலர்த்த முக்கிய இடங்களாக விருத்தாச்சலம்- கடலூர் மற்றும் சிதம்பரம் புறவழிச்சாலைகளைப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குத் தேவையான விவசாயப் பொருட்களை மட்டும் எடுத்துவிட்டு  மீதமுள்ள விவசாயக் கழிவுகளைச் சாலையோரம் டன் கணக்கில் குவித்து வைத்துள்ளனர்.  

இதனால் சாலை ஓரங்களில் கிடக்கும் விவசாயக் கழிவுகளை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்துவதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் கருகி நாசமாகிறது.  

அதேசமயம் இந்தக் கழிவுகளை நல்ல இயற்கை உரங்களாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்கள்  விவசாய சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளை ஆர்கானிக் முறையில் பதப்படுத்தி நல்ல உரமாக மாற்ற இயலும் என்ற நம்பிக்கையில் சாலையோரம் கிடக்கும் அனைத்துக் கழிவுகளையும் வாகனத்தின் மூலம் எடுத்துச் சென்று பதப்படுத்தி நல்ல இயற்கை உரமாக மாற்றுகின்றனர். 

தற்போதுள்ள காலகட்டத்தில் விவசாயிகள் ரசாயன பொருட்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் போது அவர்களுக்குச் செலவுகள் அதிகமாகிறது. மேலும் விளைநிலங்களின் இயற்கை தன்மையும் குறைகிறது. இவற்றைப் போக்க இயற்கையான பொருட்களைப் பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரங்களுக்கு விவசாயிகள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. 
 

 


ஒரு கிலோ மண்புழு உரம் எட்டு ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளையக்கூடிய பொருள்களில் கிடைக்கக்கூடிய கழிவுகளைப் பயன்படுத்தி சிறப்பான முறையில் மண்புழு உரம் தயாரிக்க முடியும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய விவசாயப் பொருட்களை உரங்களாக மாற்றவேண்டும் என்றும் , பொதுச் சொத்துக்களுக்கும், மற்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், சாலையோரங்களில் விவசாயிகள் கழிவுகளை ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர்த்துவிட்டு, அக்கழிவுகளைச் சிறப்பான முறையில் உரமாக மாற்றும் முயற்சியில் அனைத்து விவசாயிகளும் ஈடுபடவேண்டும் என்று இயற்கை விவசாயிகள் கூறுகின்றனர். 
 

http://onelink.to/nknapp


மேலும் தமிழக அரசு சாலையோரம் உள்ள விவசாயக் கழிவுகளை அகற்றுவதைத் தவிர்த்துவிட்டு,  இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கழிவுகளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான உதவிகளையும், அவற்றைப் பதப்படுத்தி, இயற்கை உரங்கள் உற்பத்தி செய்ய நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் இயற்கை விவசாயம் மென்மேலும் வளரும் என்றும், அதன்மூலம் நஞ்சில்லா உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்கின்றனர்.  

 

 

 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.