Skip to main content

கலைஞர் செய்து காட்டியதை எடப்பாடி பழனிசாமி செய்வாரா? | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #3

Published on 30/03/2021 | Edited on 05/04/2021

 

Tamil Nadu Election 1971 History

 

பிப். 3, 1969ஆம் ஆண்டு திமுக தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பு ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. அதுவரை கட்சியை வழிநடத்திய பொதுச்செயலாளரும், 1967ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை வழிநடத்திவந்த தமிழக முதல்வருமான அண்ணா மறைந்தார். அன்றைய ஆளுநர் உஜ்ஜல்சிங், திமுக மூத்த தலைவர் நெடுஞ்செழியனை தற்காலிக முதல்வராக நியமனம் செய்தார். அதேவேளையில், முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அனைத்துத் தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் நெடுஞ்செழியன். அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. அமைச்சர் கே.ஏ. மதியழகன் கலைஞரை முதல்வராக முன்மொழிந்தார். அப்போது எஸ்.ஜே. ராமசாமி, நெடுஞ்செழியன் பெயரை முன்மொழிந்தார். இதனால், முதல்வர் பதவிக்கான வாக்கெடுப்புக்குப் போகவேண்டிய சூழ்நிலை உருவானது. அதே கனம் நெடுஞ்செழியன், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் முதல்வராக தயார்; இல்லை என்றால் எனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று மறுத்தார்.

 

பெரும் புயலுக்குப்பின் அமைதியாக கலைஞர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பதவியேற்புக்கு முன்னதாக கலைஞர், முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறிவந்தார். அமைச்சர்கள் மதியழகன், சத்யவாணி முத்து, சாதிக்பாட்சா எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர், “நீங்க தான் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கலைஞரை சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்துதான் கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கே வந்ததாக, கலைஞர் தனது 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். ஏகமனதாக முதல்வரானாலும், 1971ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் திமுக தேர்தலை சந்திக்கிறது. 67-ல் வெற்றிபெற்ற திமுகவின் ஆட்சிக் காலம் 72-ல் முடியவேண்டியது. ஆனால், ஆட்சி முடிய ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார் கலைஞர். மக்கள் மத்தியில் முதல் முறையாக முதல்வர் வேட்பாளராகக் கலைஞர் களமிறங்குகிறார். திமுக கூட்டணி 205 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றிகண்டது. இதில், திமுக மட்டும் 184 தொகுதிகளை வென்றது. இந்தத் தேர்தலில், தேசிய காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது.

 

Tamil Nadu Election 1971 History

 

1971-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞருக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்தது. இதற்கு, மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதனைச் சமாளித்து கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அன்றே சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் மாணவர்களை தாக்கினர். அதனைத் தொடர்ந்து மறுநாள் உடல் மற்றும் முகம் வீங்கிய நிலையில் ஒரு மாணவனின் சடலம் கல்லூரி அருகே இருந்த குளத்தில் மிதந்தது. அதே கலவரத்தில் உதயகுமார் எனும் மாணவன் மாயமானார். குளத்தில் இருந்த சடலம் மாணவர் உதயகுமார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். மாணவர்களின் எழுச்சி, மாணவர்களின் போராட்டம், மாணவர்களின் ஆதரவு என ஆட்சிக்குவந்தது திமுக. ஆனால், அதே திமுக ஆட்சியில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பெரும் கரும்புள்ளியாக விழுந்தது.

 

அதற்கடுத்து மதுவிலக்கு பிரச்சனை; கடந்த 2016 தேர்தலில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை முக்கியத்துவப்படுத்தினர். இந்தத் தேர்தலில் மது ஆலைகள் யாருடையது, யார் தமிழகத்தில் மது விலக்கு தளர்வுகளைக் கொண்டுவந்தது என விவாதங்கள் அனல் பறந்தது. '1971 ஆட்சியில் கலைஞர் தலைமையிலான அரசு மதுவிலக்கு தளர்வுகளைக் கொண்டுவந்தது அதனால்தான், தமிழகத்தில் மது ஆறு ஓடுகிறது' எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. 1971 திமுக ஆட்சியில் மதுவிலக்கு தளர்வு கொண்டுவரப்பட்டதே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த மதுவிலக்கு தளர்வுகள் எவ்வளவு காலம் நீடித்தது?

 

1937ஆம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்தபோது சென்னை மாகாணத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால், நிதி நெருக்கடியைக் காரணம்காட்டி 1971ல் தமிழகத்தில் மது விலக்கிற்கு தளர்வைக் கொண்டுவந்தார் அன்றைய முதல்வர் கலைஞர். பெரும் இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் மதுவிலக்கில் தளர்வு ஏற்பட்டது. உண்மையில், 1971ல் மதுவிலக்கு தளர்வு கொண்டுவந்த திமுக, அதே ஆட்சிக் காலத்தில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தியது. அதன்பின், 1977ல் அமைந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981ஆம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு தளர்வு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், 1983 ஆம் ஆண்டு மதுபானங்களை மொத்த வியாபாரம் செய்யும் வகையில், 'டாஸ்மாக்' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் சில்லறை வணிகம் செய்யும் உரிமையை 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வழங்கியது. ஆனாலும் திமுகவின் மதுவிலக்கு தளர்வு இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

Tamil Nadu Election 1971 History

 

1972ஆம் ஆண்டு கட்சியின் சொத்துவிவரங்களைக் கேட்டு பொதுவெளியில் எம்.ஜி.ஆர். பேசினார். அதனைத் தொடர்ந்து அவர் முதலில் தற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டார். 14 அக்டோபர் 1972 அன்று, எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு, அக்டோபர் 17 ஆம் தேதி, எம்.ஜி.ஆர்., 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் புதிய கட்சியைத் துவங்கினார். அதன்பிறகு, கலைஞர் உள்ளிட்ட அமைச்சரவை மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் கொண்ட பட்டியலை அன்றைய ஆளுநர் கே.கே.ஷாவிடம் கொடுத்தார். ஆனால், 'அது எப்படியும் முதல்வர் பார்வைக்குச் சென்றுதான் குடியரசுத் தலைவருக்குச் செல்லும்' எனும் விவரம் அறிந்ததும் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். பின்னர், சிறிது காலம் கழித்து நேரடியாக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் கொடுத்தார். அதன்மூலம், பிரதமர் இந்திராவிடம் சென்ற அந்தப் புகார்ப் பட்டியல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டு மத்திய அரசின் அதிகாரத்திற்கும் மாநில அரசின் உரிமைக்கும் நடந்தபோரில், மத்திய அரசின் அதிகார பலம் மாநில அரசின் உரிமையை நசுக்கி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது.

 

கச்சத்தீவு விவகாரம் கலைஞரையும், திமுகவையும் கலங்கடித்துக்கொண்டிருந்த நேரத்தில், இந்திய அரசையே கலைக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆம், 1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதி வெற்றி செல்லாது என தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்ததும், இந்தியாவில் பத்திரிகைகளுக்குக் கடிவாளம் கட்டப்பட்டது. மத்திய அரசை விமர்சித்தாலோ, கண்டனங்கள் தெரிவித்தாலோ, போராட்டங்கள் நடத்தினாலோ சிறை! ஓர் இந்தியரின் தலைமையில் ஆங்கிலேயரின் ஆட்சி மீண்டும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. இந்தியா முழுக்க நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. நேரு கொண்டுவந்த பிரிவினை தடுப்புச் சட்டத்தின்போது அண்ணா மாற்றிக்கொண்டது திராவிட நாடு கொள்கையை மட்டுமே. ஆனால், 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்பதில் விடாப்பிடியாகவே இருந்தார் அண்ணா. அவர் வழி வந்த கலைஞரும் அதையே முழங்கினார்.

 

Tamil Nadu Election 1971 History

 

அதனால், நெருக்கடி நிலையில் மத்திய அரசின் கை ஓங்கியபோது, அதனைத் தன் பேனாவினாலும், போராட்டத்தினாலும் அடக்க முயன்றார் கலைஞர். விளைவு, தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு, கலைஞர் மீதும் திமுக ஆட்சியின் மீதும் எம்.ஜி.ஆர்., கொடுத்த ஊழல் புகார் தூசி தட்டி எடுக்கப்பட்டு சர்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் நீட்சியாக இந்த ஆட்சிக் கலைப்பு அரங்கேற்றப்பட்டது.

 

இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்ததால், மாநிலக் கட்சிகளை மத்திய அரசு தடைசெய்ய திட்டம் தீட்டி வருகிறது என செய்தி வெளியானது. மாநிலக் கட்சிகளுக்குத் தானே தடை என்று எம்.ஜி.ஆர்., மாநில சுயாட்சியை உயிர்மூச்சாக முழங்கிய அண்ணாவின் பெயரில், தொடங்கிய அதிமுகவை, அ.இ.அ.தி.மு.க. எனப் பெயர் மாற்றம் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த 1977 சட்டசபைத் தேர்தலில் அதிமுக இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மதுவிலக்கு, அதிமுக உருவாக்கம், எம்.ஜி.ஆர். கொடுத்த ஊழல் புகார், அதன் மீது இந்திரா தொடுத்த 'சர்காரியா கமிஷன்' என எல்லாம் திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு சாதகமாகவும் அமைந்தன.

 

1969-ல் மக்களால் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படாத கலைஞர், 1971 தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கி 184 தொகுதிகளில் திமுகவை வெற்றிபெற வைத்து முதல்வரானார். மக்களால் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படாத எடப்பாடி, மக்கள் மத்தியில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் காலத்தைப் போலவே மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். ஆனால், கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக 1969ல் இருந்து 1971 வரை கலைஞர் செய்ததும், 2017ல் இருந்து 2021 வரை பழனிசாமி செய்ததும் ஒரே மாதிரியான ஆட்சியா என மக்கள் முடிவு செய்வார்கள்.

 


திமுக ஆட்சியைப் பிடிக்க மொழி மட்டும்தான் காரணமா? அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. #2

 

தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4 

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.