Skip to main content

பதவிக்காக ஜெ பிணத்தில் அரசியல்!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

"என்னத்த விசாரிக்கிறாங்களோ' என மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் திடீரென மிகவும் சீரியஸான விசாரணையில் இறங்கியுள்ளது.

அடுத்த மாதம் 24-ம் தேதியோடு தனது விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில்தான் விசாரணையில் புதிய வேகம் தெரிகிறது. அடுத்த கட்ட சாட்சியங்களாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவை விசாரிக்க திட்டமிட்டுள்ளது என்கிறது ஆணைய வட்டாரம்.

 

jayadeath

jayadeath


அவர் மட்டுமல்ல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இவர்களுடன் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சாட்சியமளிக்க சம்மன் அனுப்பி விசாரிக்கப் போவதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆணையம் மிகவும் சீரியஸான விசாரணைக் கட்டத்திற்கு சென்றிருப்பதை அப்பல்லோ மருத்துவமனையை ஆணையம் டீல் செய்ததிலிருந்து தெளிவாகிறது. முதலில், ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ அளித்த மருத்துவக் குறிப்புகளை படிக்க முடியாமல் ஆணையம் திணறியது. அதற்காக ஒரு மருத்துவக் குழுவை தாருங்கள் என ஆணையம் தமிழக அரசை கேட்டது. அதை அரசு சட்டை செய்யவில்லை. ஏனோதானோவென ஒரு மருத்துவக் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவின் உதவியுடன் மருத்துவக் குறிப்புகளை படித்த ஆணையம் அதன்பிறகு திரும்பிப் பார்க்கவில்லை.

judgearumugamஅப்பல்லோவில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை சம்மன் அனுப்பி அழைத்து சாட்சி சொல்ல வைத்தது. டாக்டர்கள், நர்ஸ்கள், ஆயாக்கள் என ஜெ.வின் சிகிச்சையுடன் தொடர்புடைய அனைவரும் ஆணையத்திற்கு வந்தார்கள். அவர்கள் அளித்த சாட்சியங்களுக்கும் மருத்துவக் குறிப்புகளுக்கும் உள்ள முரண்பாடுகளை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் கேள்விக்குறியாக்கினர். அப்பல்லோ டாக்டர்களை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியும் குறுக்கு விசாரணை செய்தார். அந்த குறுக்கு விசாரணையில் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காவேரி நதிநீர் விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார் என்பதை அவர் பதிவு செய்தார்.

அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமல்ல அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் வந்து பார்த்தார்கள். ஜெ. இறந்ததாக சொல்லப்படும் டிசம்பர் 5-ம் தேதிக்கு முன்பு 3-ம் தேதிவரை அவர் நல்ல உடல்நிலையில் இருந்தார் என எய்ம்ஸ் டாக்டர்களை வைத்து பதிவு செய்தார். ஆனால் "நாங்கள் அப்பல்லோ மருத்துவர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையில்தான் சொன்னோம்' என பல்டி சாட்சியானார்கள்.

"ஜெ.வின் உடல்நிலையைப்பற்றி ஓ.பி.எஸ்., தம்பிதுரை ஆகியோரிடம் நாங்கள் விளக்கினோம்' என அப்பல்லோ டாக்டர்கள் சொன்னதை பதிவு செய்த ராஜா செந்தூர் பாண்டி தொடர்ந்து ஓ.பி.எஸ்.சை சாட்சியாக கொண்டுவர வாதிட்டார். அவரது வாதத்தை விசாரணை கமிஷன் ஏற்றுக் கொண்டது என நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறது ஆணைய வட்டாரம்.

அப்பல்லோவின் டாக்டர்களும் நர்ஸ்களும் அளித்த சாட்சியத்தில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான முரண்பாடுகளை கமிஷன் சீரியஸாக எடுத்துக் கொண்டது. ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற அறையை நேரில் சென்று பார்வையிட்டது. ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போது ஜூஸ் குடிக்கும் வீடியோ ஒன்றை வெற்றிவேல் வெளியிட்டார். அந்த வீடியோவில் இடம் பெற்ற அறையை கமிஷன் போய் பார்த்தபோது முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையை மட்டும் ஏன் மாற்றி அமைத்தீர்கள்' என அப்பல்லோவின் பொறியாளரை கேட்டதற்கு அவர், ஆணையத்திற்கு உரிய பதிலை தரவில்லை. அவரை எச்சரித்து அனுப்பினார் நீதிபதி ஆறுமுகசாமி. அடுத்ததாக அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் சி ரெட்டிக்கு சம்மன் அனுப்பினார். அவர் வரவில்லை. அவரது வழக்கறிஞர்கள்தான் வந்தார்கள்.

"அப்பல்லோ என்ன வானத்திலிருந்து குதித்த நிறுவனமா? ஜெ.வுக்கு சிகிச்சை அளித்ததற்கு பணம் பெற்றுக் கொண்டுதானே சிகிச்சை அளித்தீர்கள். அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதும் அவர் தொடர் சிகிச்சையில் அறைகள் மாற்றப்படும்போதும் ஸ்கேன் எடுக்க கொண்டு செல்லப்படும்போதும் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள் எங்கே?' என கேட்டனர். அதற்குப் பதிலளித்த அப்பல்லோ நிர்வாகம், "ஜெ. சிகிச்சை பெறும்போது சி.சி.டி.வி. இயங்கவில்லை' என்றனர். ஜெ. "சிகிச்சையின் போது சி.சி.டி.வி. பதிவுகளை நிறுத்த அப்பல்லோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது யார்' என ஆணையம் கேள்வி எழுப்பியது. அதுவரை ஆணையத்திற்கு ஒத்துழைக்காமல் நீக்கு போக்கு காட்டிய அப்பல்லோ அதன்பிறகு ஆணையத்திடம் சரணாகதி அடைந்தது. "எங்களிடம் ஜெ.வின் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளன. அதை ஆணையத்திடம் சமர்ப்பிக்கிறோம்' என்றது. "அதை உடனே கொடுங்கள்' என ஆணையம் சீரியஸாக உத்தரவிட்டுள்ளது.

"ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்பல்லோ தவறுகள் செய்திருந்தால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்கிறார் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி. அதேபோல், கவர்னர் வித்யாசாகர் ராவின் சிறப்பு செயலாளரான ரமேஷ் சந்த் மீனாவை சாட்சியத்திற்கு அழைத்த கமிஷனிடம் "கவர்னர் இரண்டுமுறை பார்த்தார், ஒருமுறை ஜெ. சீரியஸாக இருந்தார்'. இரண்டாவது முறை பிசியோதெரபி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெ., கவர்னரை பார்த்து கையசைத்ததாக கவர்னர் கூறினார்' என்றார். "இரண்டு முறை ஜெ.வை பார்த்த கவர்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஜெ.வை ஏன் பார்க்கவில்லை? கவர்னர் பார்க்கும்போது மிகவும் சீரியஸாக இருந்த ஜெ.வை தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாட்டு சிகிச்சைக்கு ஏன் கொண்டு செல்லவில்லை' என ஆணைய வழக்கறிஞர்கள் கிடுக்கிப்பிடி போட்டிருக்கின்றனர் என்கிறது ஆணைய வட்டாரம்.

இந்நிலையில், டிசம்பர் 5 நள்ளிரவு வாக்கில் ஜெ. மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று மாலையே புதிய முதல்வரும், அமைச்சர்களும் பதவியேற்க, ராஜ்பவனில் எல்லா வேலைகளும் நடந்துள்ளன. 5-ந்தேதி மாலையே அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொடி இறக்கப்பட்டதும், மீடியாக்களில் ஜெ. மரணம் என ப்ளாஷ் நியூஸ் வெளியாகி, பின்னர் மாற்றப்பட்டாலும், ராஜ்பவனில் நடந்த ஏற்பாடுகளின் அடிப்படையில்தான் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் தலைவி எப்படியாவது தேறி வந்துவிட மாட்டாரா என பரிதவித்திருந்த நேரத்தில் பதவிக்காக பிண அரசியல் நடத்தியுள்ளனர் அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையும்.

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.