Skip to main content

என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? ஊரடங்கு இப்போது வேண்டாமா? முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் மத ரீதியாக அலட்சியம் காட்டுவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும்,ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர்களுடன் விவாதிப்பதற்கு முன் கடந்த 31-ந்தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்.அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உளவுத்துறைகளான ஐ.பி., ரா உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளுடன் ஒரு அவசர ஆலோசனையை நடத்தியிருந்தார் பிரதமர் மோடி.


  bjp



அந்த ஆலோசனையில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அளவிலான சில வைரலாலஜி ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து கொடுத்துள்ள ரிப்போர்ட்டுகள் அலசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது.ஆனால் அவைகள் குறைத்துக்காட்டப்படுகின்றன.

21 நாள் தேசிய ஊரடங்கு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்தாலும் இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடவடிக்கைகள் தற்போதுள்ளதைவிட இரு மடங்கு தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஊரடங்கை நீட்டிப்பது அவசியம்.இதில் அலட்சியம் காட்டினால் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை செய்திருக்கிறது.

இந்த எச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதில்,கொரோனாவைக் குறித்த தெளிவு மக்களுக்கே வந்திருப்பதால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதில் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.ஆனால், ஊரடங்கை நீட்டிப்பது வேறு பல சிக்கல்களை உருவாக்கும்.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இப்போதே பணப்புழக்கம் குறைந்து விட்டதால் ஊரடங்கை உடைத்து வெளியேறலாமா என யோசிக்கிறார்கள்.மளிகைக் கடைகளில் உள்ள பொருட்களும் குறைந்து விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் உணவுதானியத் தட்டுப்பாடு பல மாநிலங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும்.அதனால், ஊரடங்கை நீட்டிக்காமல் சூழலைக் கையாள்வதுதான் சரியானதாக இருக்கும் என உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.அதிகாரிகளின் யோசனை அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்களையும் ஆமோதிக்க வைத்திருக்கிறது.



 

cm



கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிப்பதிலும் தொற்று உறுதி சோதனைகளை விரைவு படுத்துவதிலும் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சைத் தருவதிலும் மாநில அரசுகள் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஊரடங்கு முடிவுக்குப் பிறகும் இதே கவனத்தை சுகாதார துறையினர் மேற்கொள்வது அவசியம் என அதிகாரிகள் சொன்ன யோசனைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இதனையடுத்தே, மாநில முதல்வர்களுடன் மீண்டும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

முதல்வர்களுடன் மோடி விவாதித்தபோது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டும்படி இருக்கிறது. இருப்பினும் சமுக தொற்றாக மாறாமல் இருக்க இன்னும் வேகம் வேண்டும். தீவிர கவனம் செலுத்துங்கள். சோதனை மையங்களையும், மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவதிலும் பல மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. மேலும், கொரோனாவை தடுப்பதற்காக மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளில் தவறுகள் நடந்து வருகிறது. அதனை சரி செய்யுங்கள். டெல்லியில் நடந்த மத வழிபாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு மாநிலங்களுக்கு திரும்பியவர்களை கண்காணிப்பதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என காட்டமாக பேசிய மோடி, ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து மக்கள் வெளியேறாமல் இருக்க அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அவர்களது வீடு தேடி செல்வதற்குரிய வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தம்மிடமிருந்த புள்ளி விபரங்களை வைத்து கேள்விகளை எழுப்பினார் மோடி.

 

admk



மோடியுடன் பேசிய மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே, டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தியிருக்கிறோம். அவர்களோடு தொடர்புடையவர்களும் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருக்கிறது. எந்த ஒரு மதத்தின் கூட்டங்களுக்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. சோதனைகளின் முடிவுகளை விரைந்து அறிந்துகொள்வதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மூன்றாவது நிலைக்கு போகாமல் இருப்பதற்கான எல்லா மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. முக கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும் மதம் சார்ந்த கூட்டங்களில் பங்கேற்க முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிகளுக்கும் தேசிய அளவில் தடை விதிக்கலாம் என சொல்லியிருக்கிறார்.

இதே ரீதியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ம.பி.முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட பலரும் பேசினர். தமிழக முதல்வர் எடப்பாடி, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இதுவரையில் எடுக்கப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளையும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், நோய் தொற்றுள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் விரிவாகப் பேசினார்.

கொரோனா தடுப்பு நடவடிக் கைகளுக்காக 9 ஆயிரம் கோடி நிதி கேட்டு ஏற்கனவே எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியதுடன், பல்வேறு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மேலும் 3 ஆயிரம் கோடி தேவைப்படுவதால் 12 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. அப்போது மோடி எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்தார் தலைமைச் செயலாளர் சண்முகம். மோடியுடன் விவாதித்த முதல்வர்கள் அனைவருமே தங்கள் மாநிலத்துக்கு இத்தனை கோடி நிதி வேண்டும் என்பதை வலியுறுத்த தவறவில்லை. ஆனால், யாருக்குமே மோடி உறுதி தரவில்லை.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என மோடி கேள்வி எழுப்பியபோது, வேண்டாம் என்றே பெரும்பாலான முதல்வர்கள் தெரிவிக்க, டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்கள் ஊரடங்கு முடியும்போது அப்போ தைய சூழலில் தீர்மானிக்கலாம் என சொல்லியுள்ளனர். இறுதியாக பேசிய மோடி, ஊரடங்கு முடிந்த பிறகும் இப்போதைய மருத்துவ நடவடிக் கைகளே தொடர வேண்டும்.; அதில் அலட்சியம் இருக்கக்கூடாது. அனைத்து மாநிலங்களும் பின்பற் றும் வகையில் கையாள வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வழங் கும் என்பது உள்ளிட்ட சில அறி வுறுத்தல்களை கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான ஆலோசனையை முடித்ததும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அமைச்சர்கள் மற்றும் அதன் உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி. அதுகுறித்து விசாரித்த போது, ’கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதிலுள்ள சிக்கல்களை களைவதற்காக சில முடிவுகளை எடுத்தனர். குறிப்பாக, இன்வெசிவ் வெண்டிலேட்டர்ஸ், என்-95 ரக மாஸ்க்குகள், மலேரியா நோய் எதிர்ப்பு மருந்துகளான ஹைட்ராசிக் குளோரோகுவினோன், அசித்ரோமைசின், பாதுகாப்பு கவச உடைகள், மல்டி பேராமீட்டர் ஐ.சி.யூ. மானிட்டர்கள் உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக அவைகளை உற்பத்தி செய்யும் தகுதி வாய்ந்த நிறுவனங் களுக்கு மொத்த மூலதனத்தில் 30 சதவீத மானியம் தருவது உள்பட பல சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது‘’ என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இந்த ஆலோசனைகளுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து விசாரித்தார் கவர்னர் பன்வாரிலால். அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதியுடன் கவர்னரை சந்தித்த எடப்பாடி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து செல்லவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையையும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் கவர்னர் விசாரித்த போது அது குறித்து தயாரிக்கப்பட்டிருந்த ஒரு ரிப்போர்ட்டை கவர்னரிடம் கொடுத்துள்ளார் எடப்பாடி. அதனை படித்துப்பார்த்து சில அதிருப்திகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அது குறித்து விளக்கத்தை தலைமைச்செயலாளர் சண்முகம் விவரித்த நிலையில், வைரலாலஜி சோதனை மையங்களுக்கான உபகரணங்களில் நடந்துள்ள ஒரு ஊழல் குறித்து கவர்னர் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடியும் அதிகாரிகளும் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளனர் என்கிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமான அதிகாரிகள்.

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.