Skip to main content

தேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்... கட்சியின் மூத்த தலைவரை விளாசிய தமிழக எம்.பி.

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
dddd

 

வெளிப்படையான எதிரியை வெற்றிகொள்ளும் வலிமை இல்லை. உள்ளுக்குள்ளேயே உருவாகும் எதிரிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியவில்லை. இதுதான் காங்கிரசின் அகில இந்திய நிலை. கடும் நெருக்கடியில் இருக்கிறார் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

 

நேரு குடும்பத்துக்கு வெளியே இருந்து தலைவரை தேர்வு செய்யுங்கள் என்பதை வலியுறுத்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கடந்த 2019-ல் விலகினார் ராகுல்காந்தி. அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டியும் தலைவராக ராகுல்காந்தியை தேர்ந்தெடுத்த பிறகும் தலைவர் பதவியை அவர் ஏற்கவில்லை. இன்னமும் நிரந்தரத் தலைவரின்றித் தவிக்கிறது காங்கிரஸ்.

 

நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இடைக்காலத் தலைவரான சோனியாவிடம் அளித்தும் அவர் இன்னும் தேர்வு செய்யாததால், தலைமைப் பொறுப்பு குறித்து பலவித கருத்துகளும் சர்ச்சைகளும் வெளிப்படுகின்றன.

 

பீஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த் திருந்தனர். ஆனால், கடுமையான தோல்வியை காங்கிரஸ் சந்திக்க, எதிர்மறை விமர்சனங்களை வைக்கத் துவங்கி யுள்ளனர் கட்சியின் மூத்த தலைவர்கள்.

 

ddd

ராஜ்யசபாவின் காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், ""தேர்தல் காலங்களில் காங்கிரசில் வேட்பாளர் தேர்வின்போது, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது. இதனால் மக்களுக்கும் காங்கிரசுக்குமான தொடர்பு அறுந்து விட்டது. மக்கள் தொடர்பை காங்கிரஸ் நிர்வாகிகள் இழந்து விட்டனர். பாஜகவிலும் இது விதிவிலக்கல்ல. இருப்பினும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூட பாஜக வேரூன்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் அப்படி இயங்கவில்லை'' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 

அதாவது, கட்சியின் மேலிடப் பார்வை யாளர்களாக அந்தந்த மாநிலங்களுக்கு செல்பவர்களை லோக்கல் பிரமுகர்கள் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து, சகல வசதிகளுடன் ஜிவ் ஏற்றி விடுகிறார்கள். அதில் மயங்கியும், லோக்கல் அரசியலில் ஒரு சார்பு நிலை எடுத்தும், மாநிலத்தில் கட்சி வளர்ச்சியைக் கண்டு கொள்ளாமல் விடுவ தால், வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டுவிடு வதால், காங்கிரசுக்கு தொடர்ந்து தோல்வி ஏற்படுகிறது என்பதுதான் குலாம்நபியின் குற்றச்சாட்டு. தமிழக காங்கிரசின் மேலிடப் பிரதிநிதி தொடர்பான இந்த ஃபைவ் ஸ்டார் கலாச்சாரம் பற்றி அண்மையில் ராங்-கால் பகுதியில் பதிவாகியிருந்தது.

 

குலாம் நபி ஆசாத் போன்ற மற்றொரு மூத்த தலைவரான கபில்சிபில், ""18 மாதங்களாக முழு நேரத் தலைவர் இல்லாத கட்சியால் பாஜகவுக்கு எதிராக வலிமையான கட்சியாக நாம் எப்படி இருக்க முடியும்'' எனக் கேள்வி எழுப்பி யிருக்கிறார். இதற்கு வலிமை சேர்ப்பது போல பேசியிருக்கும் ப.சிதம்பரம், ""குஜராத், உத்தரபிரதேசம், ம.பி. உள் ளிட்ட மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு அடிப் படை கட்டமைப்பில் வலிமை இல்லை என்பதையும், கட்சி பலவீனமடைந்து வருவதையும் நமக்கு உணர்த்துகிறது'' என விமர்சித்திருக்கிறார்.

 

பீகாரின் மூத்த தலைவர் தாரிக் அன்வர், ‘""கட்சியின் தோல்விக்கு ஒருவகையில் குலாம்நபி ஆசாத்தும் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கு தலைமை மட்டுமல்ல அனைவருமே காரணம்தான். தலைவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய தோல்வி வந்திருக்காது'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

 

ராகுலின் ஆதரவாளரும் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ""தலைமைக்கு எதிராக விமர்சிப்பவர்கள் தேர்தல் களத்திற்கே வராதவர்கள். இந்த சரிவில் இருந்து காங்கிரஸ் மீண்டும் எழும்'' என்கிறார்.

 

ddd

 

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் எம்.பி. மானிக்கம்தாகூரிடம் நாம் பேசியபோது, ’""குலாம் நபி விமர்சித்திருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல் கலாச்சாரம் அவருக்கு தெரியாததல்ல. தமிழகத் துக்கு வரும் போதெல்லாம் அந்த கலாச்சாரத்தை அனுபவித்தவர்தான். குலாம்நபியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மோடி-அமித்சாவின் அதிகாரத்தை 2024-ல் காங்கிரஸ் துடைத்தெறியும். ராகுலின் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழும். தலைமையை விமர்சிக்கும் குலாம்நபி போன்றவர்கள், கட்சி தேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்'' என்கிறார் ஆவேசமாக.

 

குலாம்நபியின் விமர்சனத்திற்கு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என விசாரித்தபோது, ""வருகிற ஜனவரி மாதம் அவரது ராஜ்யசபா பதவி காலம் முடிவடைகிறது. மீண்டும் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக அண்மைக்காலத்தில் சாத்தியமில்லை. 1982-களிலிருந்தே டெல்லியில் அரசின் ஆடம்பர பங்களாவில் இருந்தே பழக்கப்பட்டு விட்டார் ஆசாத். பிப்ரவரிக்கு பிறகு அரசு பங்களாவை காலி செய்வ வேண்டும். கட்சியிலும் இனி பெரிய பிடிப்பு அவருக்கு கிடைக்காது. அதனால் பாஜகவின் விருப்பத்திற்கேற்ப இப்படி விமர்சித்து வருகிறார்'' என்கின்றனர்.

 

இதற்கிடையே, பாஜகவின் வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிக்கும் சோனியா உத்தரவிட்டி ருக்கும் நிலையில், தமிழகத்தில் இதனை வீரியமாக நடத்தி வருகிறார் கே.எஸ்.அழகிரி. பாஜகவின் வேல் யாத்திரைக்குப் போட்டியாக ஏர் கலப்பை பேரணி யை நடத்தி வரும் அழகிரி, வருகிற 28-ந்தேதி 71 தொகுதிகளில் இந்த பேரணியை நடத்த திட்டமிட் டிருக்கிறார். முக்கிய தலைநகரங்களில் இந்த பேரணியை துவக்கி வைக்கிறார்கள் காங்கிரஸ் தலை வர்கள். 234 தொகுதிகளிலும் இத்தகைய பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

 

டெல்லியில் காற்றில் மாசு அதிகரித்திருப்ப தால் கோவா அல்லது சென்னையில் தங்கியிருக்கச் சொல்லி சோனியாவுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார்கள் அவரது குடும்ப மருத்துவர்கள். இதனைத் தொடர்ந்து மகன் ராகுல்காந்தியுடன் கோவாவுக் குப் பயணப்பட்டிருக்கிறார் சோனியா. இரு வாரங்கள் அங்கு தங்கியிருக்கும் சோனியா, கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து ராகுலிடம் விவாதித்து வருகிறார். மூத்த தலைவர்களையும் காங்கிரஸ் நிர்வாகிகளையும் கட்சியின் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து அரசியல் செய்யும் சக்தி ராகுல் காந்தியைத் தவிர வேறு எந்த ஒரு தலைவருக்கும் இல்லை என்பதால் கட்சியின் முழு நேர தலைவராக ராகுலை ஏற்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார் சோனியா காந்தி.

 


 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.