Skip to main content

ஓபிஎஸ்-பண்ருட்டி ராமச்சந்திரன் ரகசிய சந்திப்பு! எடப்பாடி பழனிசாமி டென்ஷன்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
ddd

 

அதிமுகவின் செயற்குழு கூடவிருக்கும் சூழலில் சில முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அந்த வகையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று மிக ரகசியமாக சந்தித்துள்ளார் ஓபிஎஸ்! அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகரன் (இருவரும் வன்னியர்கள்) ஆகிய இருவரையும் தன்னுடன் ஓபிஎஸ் அழைத்து சென்றுள்ளார். ஓபிஎஸ்-பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்திருக்கிறது. 

 

தன்னை சந்திக்க வந்த ஓபிஎஸ்-ஐ முக மலர்ச்சியுடன் வரவேற்றுள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன். மிக ரகசியமாக நடந்த அந்த சந்திப்பில், இரண்டு தலைவர்களும் தரப்பும் பரஸ்பர உடல் நலம் விசாரித்துக் கொண்டதற்கு பிறகு நடப்பு அரசியல் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். குறிப்பாக பழைய சம்பங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஓபிஎஸ், “2011-ல் அம்மா ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் நீங்கள்தான். அதிமுகவுடன் தேமுதிகவை கூட்டணியில் சேர வைத்ததிலிருந்து நீங்கள் எடுத்த ஒவ்வொரு ஸ்டெப்பும் அதிமுகவுக்கு வலிமையை கொடுத்தது. அன்றைக்கு உருவான கூட்டணி பலம்தான் திமுக ஆட்சியை வீழ்த்தி அம்மாவை (ஜெயலலிதா) அரியணையில் ஏற்றியது” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

 

அதற்கு, “அன்றைக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் என் மீது மிக நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கேற்ப கூட்டணி உருவானது. கூட்டணி வலிமை ஒரு புறமிருந்தாலும் அதிமுகவின் செல்வாக்கும் ஆட்சி அமைய முக்கிய காரணம்” என்று தெரிவித்திருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

 

இந்த நிலையில், “அரசியலில் இருந்து நீங்கள் விலகியிருப்பது அதிமுகவுக்கு இழப்பு! அதனால் பழையபடி நீங்கள் அரசியல் நடவடிக்கையை தொடர வேண்டும். உங்கள் ஆலோசனைகள் கட்சிக்கு தேவைப்படுகிறது. வருகிற 28-ந்தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டியுள்ளோம். அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும், மறுக்கக்கூடாது!‘’ என்று வலியுறுத்தியுள்ளார் ஓ.பி.எஸ்.ஸும் கே.பி.முனுசாமியும்.

 

dddd

 

இதனையடுத்து, அதிமுகவின் செயற்குழுவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். ஜெயலலிதா மறைவும், சசிகலா சிறை வாழ்வும் அரசியலில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை விலக வைத்திருந்தது. அதற்கேற்ப அவரது உடல் நிலையும் ஒத்துழைக்க மறுத்தது. தற்போது பண்ருட்டி ராமச்சந்திரனின்  உடல் நிலை நன்றாக இருக்கும் நிலையில் அவரை சந்தித்து ஓபிஎஸ் விவாதித்திருப்பது அதிமுகவில் மேலிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

சமீபகாலமாக, வன்னியர் சமூதத்தின் ஆதரவை பெறும் வகையில்  வன்னியர் சமூக தலைவர்களை ஒரே நேர்க்கோட்டுக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் ஓபிஎஸ்! வன்னியர் சமூகத்தின் ஆகப் பெரிய தலைவராக மதிக்கப்படும் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் கடந்த வாரம் வந்தபோது அவரை பாராட்டியும் புகழ்ந்தும் ஓபிஎஸ் பதிவு செய்தது கூட இப்படிப்பட்ட பின்னணியில்தான்.

 

அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனனின் உடல்நிலை அண்மைக்காலமாக பாதித்திருப்பதால் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறது அதிமுக தலைமை! அந்த வகையில், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க, பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் அழைத்து வருவதால், அதிமுகவின் அவைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படலாம் என்றும் அதிமுக மேல்மட்ட தகவல்கள் கூறுகின்றன! ஆனால், ஓபிஎஸ்ஸின் வன்னியர் வியூகத்தை ஜெயிக்க வைக்க எடப்பாடி விடுவாரா? என்கிற கேள்விகளும் அதிமுகவின் எடப்பாடி ஆதரவு அமைச்சர்களிடையே எதிரொலிக்க செய்கிறது! ஓபிஎஸ்-பண்ருட்டி சந்திப்பை அறிந்து டென்ஷனாகியிருக்கிறார் எடப்பாடி.

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.