Skip to main content

இதனால்தான் முதல்வர் நேரக்கட்டுப்பாட்டை விதித்தார்!!! - அமைச்சர் உதயகுமார் நக்கீரனுக்கு பேட்டி

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
 

u



கரோனா தொற்று நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது?

இந்த கரோனா தொற்று என்பது இந்திய அளவில் என்பதை தாண்டி, உலக அளவில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இதற்காக பல்வேறு நிர்வாக குழுக்களை அமைத்து பணிகளை செய்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு கொண்டு அந்தெந்த மாவட்டங்களின் நிலைமைகளை உடனுக்குடன் அறிந்து வருகிறோம். அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதில் தீவிரமாக இருக்கிறார். விரைவில் அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
 

nakkheeran app



வருவாய் துறை அமைச்சராக வணிகர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தாலும் அதனை வழிமுறைபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுமக்களும் நாள் செல்ல செல்ல வெளியே வர முயற்சிக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அப்படி அல்ல... இந்த ஊரடங்கு கொண்டு வரப்பட்டபோதே, பல்வேறு விதிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தியது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசாங்கம் விதிவிலங்கு கொடுத்தது. இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளித்தது. மேலும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும் விளக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைபோன்று அத்தியாவசிய உணவுப்பொருட்களான காய்கறிகள், பால், மளிகை முதலியவற்றுக்கு எல்லாம் நாம் முதலிலேயே விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தோம். மக்கள் வெளியே வந்தால் தொற்று பரவும் என்பதற்காகத்தான் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தோம். உலக சுகாதார நிறுவனமும் இத்தகைய வழிமுறைகளை பின்பற்ற சொல்லியுள்ளது. அதே போல மத்திய குடும்ப நலத்துறையும் நமக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மருத்துவ நிபுணர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். இந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறியதால்தான், மாண்புமிகு முதல்வர்கள் அவர்கள் நேரக் கட்டுப்பாடுகளை விதித்தார்.  அங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மைதானங்கள், பெரிய பேருந்து நிலையங்களில் காய்கறி கடைகளை அமைக்க முதல்வர் உத்ததரவிட்டார். 
பாரதப் பிரதமர் அனைவரையும் 5ம் தேதி இரவு விளக்கேற்ற சொல்லியிருந்தார். அதனை எப்படி பார்க்கிறீர்கள், அதை சரி என்று நினைக்கிறீர்களா?

இந்தியா போன்ற உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற நாட்டில் ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும்போது அது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இருக்க வேண்டும். அநேக விஷயத்தில் பிரதமர் அருமையாக செயல்படுவார். விலக்கு ஏற்றுதல் என்பது தவறான காரியம் இல்லை. தமிழர்கள் தங்கள் வீடுகளில் காலங்காலமாக தொடர்ந்து விளக்கேற்றி வருகிறார்கள். எனவே விளக்கேற்றுவது என்பது சட்டவிரோதம் கிடையாது. எனவே பிரதமரின் அறிவிப்பில் எந்த தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. 

 

Next Story

“என்றைக்கு பின்வாங்க மாட்டோம்”- சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021
"We will never back down from the promises we have made" - the Chief Minister replied in the Assembly

 

சட்டப்பேரவை கூட்டமானது செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-2022 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பெட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தின் கடைசி நாளில் நிதியமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் பதிலுரை ஆற்றவுள்ளார்கள். 

 

இந்த சூழலில், இன்று நடைபெற்ற விவாதத்தில் வெள்ளையறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “வெள்ளை அறிக்கை என்பது தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் பின்வாங்குவதற்கான முயற்சி என்பதைப்போல உதயகுமார் கருத்து தெரிவித்தார்.

 

நான் நேற்று முன்தினம் 100வது நாள் காணக்கூடிய  இந்த ஆட்சிக்குப் பாராட்டு தெரிவித்துப் பேசினேன். அப்போது ஏற்புரையாற்றிப் பேசும்போது கூடச் சொன்னேன்; எந்த காரணத்தைக் கொண்டும் நாங்கள் அளித்திருக்கிற வாக்குறுதிகளிலிருந்து என்றுமே பின் வாங்க மாட்டோம். நீங்கள் கேட்கலாம் விவசாயக் கடன், நகைக் கடன் எல்லாம் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்களே, அதற்கு மழுப்பலான பதில்களைச் சொல்லியுள்ளீர்களே என்று. இதை உறுதியாகச் சொல்கிறேன். வெள்ளை அறிக்கையில் இதுகுறித்து தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய கணக்குப் போட்டுப் பார்க்கையில், அதிலும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருக்கிறது. அதை எல்லாம் நிச்சயமாக சரிசெய்து அதற்கு பிறகு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருக்கிறோம்.

 

உங்கள் ஆட்சி நடைபெறும் பொழுது நீங்கள் தந்த வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை. அதில் சிலவற்றை நிறைவேற்றி உள்ளீர்கள். ஆனால் பலவற்றை நிறைவேற்றவில்லை. அதனை நீங்கள் மறந்து விடக் கூடாது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள், தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட்டிற்கு 25ரூபாய்க்கும் தரப்படும் என்று சொன்னீர்கள், தந்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகக் கொடுக்கப்படும் என்று சொன்னீர்கள், யாருக்காவது கொடுத்தீர்களா? குறைந்த விலையிலேயே அவசியமான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தீர்கள், கொடுக்கப்பட்டதா? அனைவருக்கு அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்றீர்கள், அது என்னாச்சு? கோ ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீர்கள், அது கொடுத்தீர்களா?

 

பண்ணை மகளிர் குழு அமைக்கப்படும் என்று கூறினீர்கள், அது எங்கு அமைத்தீர்கள்? அனைத்து பொது இடங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தித் தருவீர்கள் என்று சொன்னீர்கள், எங்கேயாவது ஒரு இடத்தில் காண்பியுங்கள்? டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் அமைக்கப்படும் சொன்னீர்கள், எங்கையாவது அமைத்தீர்களா? பட்டு ஜவுளி பூங்கா உருவாக்குவோம் என்று சொன்னீர்கள், உருவாக்கியுள்ளீர்களா? சென்னையில் மோனோ ரயில் என்று சொன்னீர்கள் ஆனால் கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ ரயிலைத் தான் நிறைவேற்றினீர்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கு. இந்த விவசாய பயிர்க் கடன் மற்றும் நகைக் கடனை பொறுத்தவரைக்கும் எங்கெங்கு முறைகேடுகள் நடந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்துப் பேசுகிற பொழுது நிச்சயமாக அவைகளெல்லாம் ஆதாரங்களோடு உங்களிடத்தில் எடுத்துச் சொல்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிலளித்தார். 

 

 

Next Story

அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டோம்... பேச மாட்டோம்... -ஆர்.பி.உதயகுமார்

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
R. B. Udhaya Kumar

 

 

அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உயர்மட்ட குழு நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம், தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் அதிமுகவில் அறிவிக்கப்படுமா? அதிமுக ஒற்றை தலைமையில் கீழ்தான் இதுவரை தேர்தலை சந்தித்திருக்கிறது. இரட்டை தலைமையை... என்று கேள்வி முடிப்பதற்குள்,

 

''தலைமை இதுகுறித்தெல்லாம் பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. அதிமுக தொண்டர்களில் நானும் ஒருத்தன். தலைமை ஒரு உத்தரவிடுகிறது என்றால் அதற்கு கட்டுப்பட்டால்தானே நான் பதவியில் இருக்க முடியும். மைக் கிடைச்சிருச்சின்னு கண்டதையெல்லாம் பேச முடியாது... அப்புறம் வீட்டுக்குத்தான் நாங்க போகணும். பேச முடியாது. கருத்து சொல்ல முடியாது, கருத்து சொல்லக்கூடாது. அது எல்லையைத் தாண்டியதாக வரும். பேச மாட்டோம், அதைப் பற்றியே பேச மாட்டோம். அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டோம்'' என்றார்.