Skip to main content

கர்நாடக இடைத்தேர்தல்கள் எடியூரப்பாவை கவிழ்க்குமா?

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

கர்நாடகா இடைத்தேர்தல்களை சந்திப்பதற்காகவே காங்கிரஸின் செல்வாக்கு மிக்க தலைவரான சிவக்குமாரை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது பாஜக அரசு. ஆனால், அதனால் பெரிய அளவில் பாஜகவுக்கு பலன் இருக்காது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பொருளாதா சீர்குலைவுகளை வலுவான குரலில் எதிரொலிப்பார் என்பதால் ஸ்ட்ராங்கான ஆதாரம் எதுவும் இல்லாமலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து சிறைக் காவலை நீடித்து வருகிறது மத்திய அரசு.
 

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேர், மஜத எம்எல்ஏக்கள் 4 பேர் ஆக 15 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதை எதிர்கொள்வதற்காக சிவக்குமாரை கைது செய்தது பாஜக அரசு. கைது செய்த பிறகு அவருக்கு எதிராக 200 புகார்கள் பெறப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்தது.

karnataka by election 15 assembly bjp government stay or not election decide

கர்நாடாகா காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவரான சிவக்குமாரை கைது செய்திருப்பதால், அந்த சாதியினர் மிகுதியாக உள்ள தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் முக்கிய புள்ளிகளை விலைக்கு வாங்கி பாஜக எளிதில் வெற்றிபெறலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சிவக்குமார் கைதுக்கு எதிராக கர்நாடகாவில் ஏற்பட்ட கொந்தளிப்பு பாஜகவின் எண்ணைத்தை தவிடுபொடியாக்கியது.

 

சிவக்குமார் கைது, குமாரசாமி ஆட்சிக்கவிழ்ப்பு ஆகிய இரண்டுமே ஒக்கலிக்கர் வகுப்பினரை ஆத்திரமடையச் செய்துள்ளது என்கிறார்கள். சிவக்குமார் கைதுக்கு முன்னரே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, காங்கிரஸ் வெற்றிபெற்ற 11 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றுவது என்று உறுதி மேற்கொள்ளப்பட்டது.

 

கடந்த மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் மத்தியில் ஒற்றுமையில்லாமல் போனதால் தோல்வி ஏற்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், மஜத, பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டிருந்தன. அப்போது காங்கிரஸ் பெற்ற 11 தொகுதிகளிலும், மஜத பெற்ற 4 தொகுதிகளிலும்தான் இப்போதும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
 

karnataka by election 15 assembly bjp government stay or not election decide

 

எனவே, அந்தத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை பிரச்சனை என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். சிவக்குமார் இல்லாத நிலையில், சித்தராமய்யா, ஜி.பரமேஸ்வரா, தினேஷ் குண்டுராவ் ஆகியோர்தான் இப்போது தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட வேண்டும். இதற்காக, சனிக்கிழமை ஹோஸ்கேட் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுயமரியாதை பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

 

கடந்த மக்களவைத் தேர்தலில் ஒக்கலிகர் பகுதிகளில் பாஜக கூடுதல் வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இப்போது, குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்பும், சிவக்குமார் கைது விவகாரமும் பாஜகவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு மாத ஆட்சியில் எடியூரப்பாவின் நிர்வாகம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. காபி டே அதிபர் தற்கொலை விவகாரம், பொருளாதார சீர்குலைவுகள், வெள்ள நிவாரண பணிகளில் குளறுபடிகள், சித்தராமய்யா தொடங்கிய சமூகநலத் திட்டங்களுக்கான நிதியை குறைத்தது, இந்திப் பிரச்சனை என பல்வேறு அம்சங்கள் எடியூரப்பாவுக்கு எதிராக இருக்கின்றன.

 

எனவே, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 15 தொகுதிகளுமே பாஜகவுக்கு சிக்கலைத்தான் ஏற்படுத்துகின்றன. காங்கிரஸ் தனது 11 தொகுதிகளைப் பெற்றால் எடியூரப்பா ஆட்சி கவிழ்வது உறுதி என்கிறார்கள். ஆனால், அதற்கு மஜதவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் பார்க்க வேண்டும். ஒருவேளை எடியூரப்பாவின் ஆட்சியைக் கவிழ்த்தாலும், மீண்டும் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்பதில் ஒரு சிக்கல் உருவாகும்? அப்படி ஏற்படும் சிக்கலை காங்கிரஸ் எப்படி கையாளும் என்பதும் கேள்விக்குறிதான் என்கிறார்கள்.




 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.