Skip to main content

குமரியில் கடுமையான போட்டியா ? - கள நிலவரம்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., அ.ம.மு.க. உட்பட இதர கட்சிகள், சுயேட்சைகள் என 15 பேர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர். பதினைந்து பேரில் நானா- நீயா என துவந்த யுத்தம் நடப்பது காங்கிரசின் வசந்தகுமாருக்கும் பா.ஜ.க.வின் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும்தான்.

 

ponnar



இதில் பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சில பாஸிட்டிவ் அம்சங்கள் இருக்கின்றன. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மத்திய அமைச்சரானவர். தற்சமயம் தமிழகத்தில் ஆட்சியமைத்திருக்கும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி. ஆனால் இரண்டு அரசுகளின்மீது ஆட்சிக்கெதிரான அலையிருப்பதுதான் அவரது பலவீனம்.

 

ponnar 1



குமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் பா.ஜ.க.வுக்கு அடித்தளம் போட்டு, கிராமம் கிராமமாக கட்சியை வளர்த்தெடுத்தவர் எம்.ஆர்.காந்தி. ஆனால் இன்றைக்கு அவரும் அவரது ஆதரவாளர்களும் பதவியின்றி குமுறலில் இருந்தனர். இந்தக் குமுறலையறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் தானே நேரடியாக எம்.ஆர். காந்தியைத் தேடிச்சென்று, அரவணைத்து எம்.ஆர்.காந்தி தரப்பினரின் குமுறலைக் குறைத்திருக்கிறார்.

 

vasanthakumar



பிரச்சார விவகாரத்திலும் கட்சியினரின் விருப்பப்படி போகாமல், அ.தி.மு.க.வினரின் போக்குக்கிணங்க பொன்னார் போவது விரிசலை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசுக்கு இணையாக கிறித்தவர்களின் வாக்கை வாங்கிவிடலாமென அ.தி.மு.க.வினர் கிறிஸ்தவப் பிரமுகர்கள், பாதிரியார்கள் நடுவில் அழைத்துச் செல்ல, தீவிர இந்து ஆதரவாளர்களும் பா.ஜ.க.வினருமே பொன்னாரை வித்தியாசமாகப் பார்க்கின்றனர். ஆரம்பத்தில் கிறித்தவ ஆலயம் பக்கம் தலைகாட்டிய பொன்னாரின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களை கிறித்தவர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

40 ஆயிரம் கோடி வளர்ச்சித் திட்டங்களைக் கூறி பொன்னார் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகையில், "ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' என கேள்வியெழுப்புகின்றனர். "காங்கிரஸ்தான் அதற்கு முட்டுக்கட்டை போட்டது என்றால்... ஆட்சியிலில்லாத காங்கிரஸ் எப்படி முட்டுக்கட்டை போட்டது, அதை ஏன் உங்களால் சமாளிக்க முடியவில்லை' என எதிர்க்குரல்கள் எழுவது பா.ஜ.க.வினரை வேர்த்து விறுவிறுக்க வைக்கிறது.

கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் காங்கிரசில் 56 பேர் முட்டிமோதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மீண்டும் ஜாக்பாட் அடித்திருப்பது வசந்தகுமாருக்குத்தான். வசந்தகுமார் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஒதுங்கியே இருந்தார். அவரை தற்போதுதான் சரிக்கட்டியிருக்கிறார்கள். அதுபோல விஜயதாரணி எம்.எல்.ஏ. வசந்தகுமாருக்கு சால்வை போர்த்தியதோடு சரி, இதுவரை பிரச்சாரத்தில் தலையைக்கூட காட்டவில்லை.

சொந்தக் கட்சி மனக்கசப்பே மாறாத நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ் இழுத்த இழுப்புக்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீட் அறிவித்ததிலிருந்து வசந்தகுமாருடன் இருந்த மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார், தி.மு.க.வினருக்கும், பூத் கமிட்டிக்கும் தன் மூலம் வைட்டமின்  சப்ளை நடக்குமென நம்பியிருந்தார். அதை தானே பார்த்துக்கொள்வதாக வசந்தகுமார் சொல்ல, ராஜேஷ்குமார் முகம் சுண்டிச் சுருங்கிவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

சீட் கிடைத்த வசந்தகுமாரைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை, என்ன தகுதிக் குறைச்சல் என மனசுக்குள்ளே மருகிக்கொண்டிருக்க, ஆரம்பத்திலிருந்தே வசந்தகுமார் ஜெயித்துவிடுவார் என்ற பேச்சு தொகுதி முழுக்கவும் ஓடுவதால் சென்ற முறை போலில்லாமல் தொண்டர்களிடையே கஞ்சத்தனத்தைக் காட்டுகிறாராம்.

இந்த ஏடாகூடங்கள் பிரச்சாரத்திலும் சுணக்கமாக வெளிப்பட, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இது சாதகமாகிவிடுமோ என உண்மையான தொண்டர்கள் கலங்கிநிற்கின்றனர்.ஆனால், தன்மீதும் வாக்காளர்கள் மீதும் நம்பிக்கை வைத்துப் பேசும் வசந்தகுமார், தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார். "ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டுவந்ததாகக் கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை பற்றி என்னுடன் விவாதிக்க தயாரா' என்கிறார் சவாலாக.

பரிசுப் பெட்டி புகழ் அ.ம.மு.க. வேட்பாளர் லெட்சுமணன், மக்களுக்கு பரிசு கொடுக்கிறாரோ… இல்லையோ… ரெண்டு பெரிய கட்சிகளுக்கும் பிரச்சாரத்தில் டஃப் கொடுக்கிறார்.. அ.ம.மு.க. தொண்டர்களும் மண்டைபிளக்கும் வெயிலிலும் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளில் ஆர்வம்காட்டிவருகின்றனர். தாமரை மலரப் போகிறதோ… கை ஓங்கப் போகிறதோ… என்கிற கவலையின்றி, கரன்ஸி வெள்ளம் எப்போது பாயப் போகிறது என்ற எதிர்பார்ப்பே பெரும்பாலானவர்களிடம் வெளிப்பட்டதையும் களத்தில் காணமுடிந்தது.

 

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.