Skip to main content

ஈரோட்டில் 58 ஆயிரம் பேர் கண்காணிப்பு...!  –யார் மூலம் வைரஸ் பரவியது? அதிர்ச்சி தகவல்கள்

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

 

உலகை ஆளப்பிறந்தவன் மனிதன். ஆனால், அந்த மனித இனத்தையே தனது கொடூர தொற்றால் அடக்கி அமர வைத்து விட்டது கரோனா வைரஸ். ஒவ்வொரு நிமிடமும் உயிர் பயத்தில் பதைபதப்புடன் கலங்கி வாடும் மனித குலம் இந்த வைரஸ் என்கிற கொடுங்கோலன் எப்போது புதைக்கப்படுவான் என்ற கேள்வியோடுதான் ஒவ்வொரு நொடிகளையும் கடத்துகிறார்கள்.
 

சீனாவில் தொடங்கி ஏறக்குறைய 200 நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் இந்திய சமூகத்தையும் பலமாக ஆட்டிப் படைக்கிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் அபயக்குரலின் ஒலி அதிகமாக கேட்க தொடங்கி விட்டது. இதிலிம் குறிப்பாக ஈரோடு தான் மொத்தமாக முடங்கி விட்டது. பய பீதியும் மக்களை மயானம் வரை கொன்டு செல்கிறது. 30ந் தேதி காலை வரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி (கரோனா சிறப்பு) மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட 84 நபர்களில் 20 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி என அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு தாய்லாந்து நபர்கள் 10 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் லேடி டாக்டர் உட்பட நான்கு பேருக்கு வைரஸ் தொற்றி உறுதி செய்யப்பட்டது. இந்த நான்கு பேரும் தனி குழு. ஈரோட்டில் கரோனா வைரஸ் பரவுதலுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் மூன்று நிகழ்வுகள்.

 

erode


 

ஒன்று :
 

மார்ச் மாத முதல் வாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த 40 பேர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சில நாட்கள் கலந்து கொண்ட பிறகு ஈரோடு திரும்பினார்கள் அந்த 40 பேரில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 

இரண்டு : 
 

தாய்லாந்திலிருந்து டெல்லி வந்த இஸ்லாமிய குழுவினர் 7 பேர் டெல்லியிலிருந்து மார்ச் 11ந் தேதி ஈரோடு வந்து கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை என இரண்டு மசூதிகளில் தங்கினார்கள். அதில் இரண்டு பேர் திரும்ப தாய்லாந்து செல்ல கோவை விமான நிலையம் சென்றபோது தான் அவர்கள் பரிசோதனை செய்யப்பட காய்சல் உறுதியானது. அதில் ஒரு நபர் இறந்து விட்டார். மீதி இருந்த ஒரு நபருடன் ஈரோட்டில் தங்கியிருந்த எஞ்சிய ஐந்து தாய்லாந்து நபர்கள் என 6 பேர் பெருந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி என கண்டுபிக்கப்பட்டது. இந்த தாய்லாந்து நபர்களுக்கு உதவி செய்ததாக, வீட்டுக்கு வரவழைத்து சாப்பாடு போட்டது என நெருக்கமான தொடர்பில் இருந்த 84 பேரை பெருந்துறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதில் தான் ஈரோட்டைக் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
 

மூன்று :
 

ஈரோடு ரயில்வே காலனி ரயில்வே நிர்வாக மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர் அந்த லேடி டாக்டர். சென்ற 20 நாட்களுக்கு முன்பே கோவைக்கு பணி மாறுதல் பெற்ற அவர் கோவையிலிருந்த தனது வீட்டிலிருந்து தினமும் ரயில் மூலம் ஈரோடு வந்து சென்றுள்ளார். இவரது பூர்வீகம் கேராளாவின் பாலக்காடு மாவட்டம் சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்து வந்துள்ளார். அங்கு இவருக்கு ஏற்பட்ட தொற்று இவர் மூலம் இவரது கணவர், குழந்தை மற்றும் வீட்டில் வேலை செய்ய பெண் ஒருவர் என நான்கு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நால்வரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உள்ளார்கள்.

 

ஆக இங்கிருந்து டெல்லி சென்றவர்களாலும், தாய்லாந்திலிருந்து இங்கு வந்த குழுவினராலும், கேரளா சென்று வந்த டாக்டராலும் இவர்கள் ஈரோட்டில் பழகிய, தங்கிய, இவர்களுக்கு உதவியவர்கள் இந்த நபர்களுடன் நேரிடையாக மறைமுகமாக தொடர்பில் இருந்தவர்கள் என 30ந் தேதி மாலைவரை ஈரோட்டில் வசிக்கும் மக்கள் 58 ஆயிரம் பேர், 16500 குடும்பங்கள் குறைந்த பட்சம் 15 வீதிகள் என எல்லோரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அங்கு வெளிநபர்களின் சுவாச காற்று கூட செல்லாதவாறு அடைக்கப்பட்டுள்ளது. 
 

இந்த 58 ஆயிரம் பேரும் தொடர் கண்கானிப்பில் உள்ளார்கள். இவர்களில் யாருக்கேனும் காய்சல் அறிகுறி வரும் நபர்கள் எல்லோரும் பெருந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அந்த மருத்துவமனையிலும் தற்போது வரை 84 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதோடு அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வராமல் உள்ளனர்.
 

கரோனா வைரஸ் தொற்று இந்த மூன்று நிகழ்வுகளில் உள்ள நபர்களால் தான் மேலும் மேலும் ஈரோட்டில் கூடி வருகிற அபாயம் ஏற்பட்டுள்ளது. 


இதில் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத தற்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் ஈரோட்டுவாசிகள் புதிதாக யாருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லையென்பதால் சமூக பரவல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.