Skip to main content

உங்களுக்கு எதிராக நடக்கிறதே தவிர என்னை எதிர்த்து அல்ல... அமித்ஷா மீது கோபமான கெஜ்ரிவால்... உளவுத்துறை ரிப்போர்ட்!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் வன்முறையும் சர்வதேச அளவில் அதிர்ச்சிகளை எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிலிருந்து சென்ற பிறகே, கலவரம் குறித்து தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துவிட்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் அவசர ஆலோசனையை நடத்தினார் பிரதமர் மோடி. "வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரவும், வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறியவும் நேரடி களத்தில் நீங்கள் இறங்குங்கள்'' என மோடி உத்தரவிட்டதையடுத்து, கலவர பூமியாக மாறிப்போன டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளை பார்வையிட்டார் தோவல். பா.ஜ.க.வினரின் வெறுப்பு பிரச்சாரமே கலவரத்துக்கு காரணம் என தோவலிடம் ஆவேசப்பட்டார்கள் மக்கள்.
 

bjp



இதனையடுத்து, டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட காவல்துறை உயரதிகாரிகளுடன் 2 மணிநேரம் விவாதித்தார் தோவல். அந்த ஆலோசனையில், சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் டெல்லி அரசு தோல்வியடைந்திருக்கிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் கெஜ்ரிவால் சீரியஸ் காட்டவேண்டும் என அஜீத் தோவல் அறிவுறுத்திய போது, பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் கெஜ்ரிவால்.

குறிப்பாக, "ஷாஹின்பாக்கில் நடக்கும் அமைதிவழிப் போராட்டம் டெல்லியின் வட கிழக்கிலும் பரவுவதை உங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ஜீரணிக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே அரசியல் ரீதியாகவே சி.ஏ.ஏ.வை அணுகுகிறார் அமித்ஷா. அவரது கட்டுப்பாட்டிலுள்ள உள்துறைக்கும் உளவுத்துறைக்கும் சில உத்தரவுகள் போயிருக்கிறது. உடனே, டெல்லிக்கு வெளியே இருந்து சமூக விரோதிகள் பலர் உளவுத்துறையால் வரவழைக்கப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு மத்தியில் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

bjp



பா.ஜ.க. பிரமுகர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ்சர்மா மூவரும் உள்துறையால் தூண்டப்பட்டார்கள். அவர்களுடைய வெறுப்புப் பிரச்சாரம் போராட்டக்காரர்களோடு கலந்திருந்த சமூக விரோதிகளை கொந்தளிக்க வைத்தது. இதை எதிர்பார்த்திருந்த பா.ஜ.க. பிரமுகர்களின் கும்பல்கள் கற்களை வீச, சமூக விரோதிகளும் எதிர்தாக்குதல் நடத்த கலவரம் வெடித்தது. காவல்துறையின் கைகளையும் உள்துறை கட்டிப்போட்டிருந்ததால் தடுக்க வேண்டிய அவர்கள் வேடிக்கை பார்த்ததோடு, உணர்வுபூர்வமாக போராடிய மக்களை தேடித்தேடிப் பிடித்து தாக்கினர். அவர்களுக்கு இணையாக சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவான இளைஞர்களும் களமிறங்க, கட்டுக்கடங்காமல் போனது கலவரம். கட்டிடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

வீடியோ பதிவுகளைப் பாருங்கள். போராட்டக்காரர்களுடனும் அவர்களை எதிர்க்கும் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுடனும் கலந்து விட்ட சமூக விரோதிகள்தான்ங்கிறது புரியும். இந்த பிரச்சனையின் சூத்திரதாரி அமித்ஷாதான்.

மக்கள் விரும்பாத ஒரு சட்டத்தை அவர்கள் மீது திணிக்கிற போது அதனை அவர்கள் எதிர்க்கிற சூழலில் அவர்களது அச்சத்தை தீர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. அந்த வகையில், போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களது பயத்தை போக்கியிருக்க வேண்டும். அந்த பொறுப்புணர்ச்சி மத்திய அரசுக்கு இல்லை. போராட்டம் நீடிப்பதும் அதில் கலவரம் உருவாவதும் உங்களுக்கு லாபம் என கருதியதுதான் வன்முறை வெடிக்க காரணம்'' என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி சீறியிருக்கிறார் கெஜ்ரிவால்.


அதனை மறுத்துப்பேசிய காவல்துறை ஆணையர்கள், "சமூக விரோதிகள் யாரும் உள்ளே வரவில்லை. சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டங்களை ஒடுக்க எதிர்ப்பாளர்கள் உருவாக்கிய சதி இது. ஷாருக் என்ற ஒரு நபர் துப்பாக்கி நீட்டி போலீசாரை மிரட்டுகிறான். அந்த நபர் போராட்டக்காரர்கள் பக்கமிருந்து சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் பகுதியில் நின்ற போலீஸ்காரரை நோக்கி சுடுவதாக மிரட்டுகிறான். அப்படியானால் வன்முறை எங்கிருந்து துவங்கியது என்பதை முதல்வர் (கெஜ்ரிவால்) புரிந்துகொள்ள வேண்டும் என ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.

அப்போது அஜீத் தோவல், பல புகைப் படங்களை காட்டி விவரித்ததோடு, "முதல்வர்ங்கிற முறையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் முயற்சித்திருக்க வேண் டும்'' என கெஜ்ரிவால் மீது குற்றம்சாட்ட, "அமித்ஷாவின் சட்டத்தை எதிர்த்துதான் போராட்டம் நடக்கிறதே தவிர என்னை எதிர்த்து அல்ல'' என்றிருக்கிறார் கெஜ்ரிவால்.


இதனையடுத்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் விவாதித்து விட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 26-ந்தேதி இரவு சந்தித்தார் அஜீத் தோவல். நள்ளிரவைத் தாண்டியும் ஆலோசனை நீடித்தது. உளவுத்துறையிடமிருந்து சேகரித்த ஆதாரங்களை மோடியிடம் கொடுத்திருக்கிறார் தோவல். அவை அனைத்துமே போராட்டக் காரர்களுக்கு எதிரானவைகள் என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

 

 

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.