Skip to main content

மோடியை இன்னுமா நம்புகிறது பாஜக...

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

மக்களவை பொதுத்தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக 'சங்கல்ப் பத்ரா' எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 
 

2014

 

2014 பொதுத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெற முக்கிய காரணமாக இருந்தது அப்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை. அந்தத் தேர்தல் அறிக்கையின் அம்சங்களைத்தாண்டி வடிவமைப்புடன் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையின் வடிவமைப்பை ஒப்பிட்டு பார்க்கலாம்.
 

2014ஆம் ஆண்டு பாஜகவின் 52 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் 549 உறுதிமொழிகளை அளித்தது. ‘ஏக் பாரத், ஷ்ரெஸ்தா பாரத்’ என்று தலைப்பில் வெளியானது தேர்தல் அறிக்கை. ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்பது இதன் பொருள் ஆகும். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பாஜகவின் 45 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் 75 உறுதிமொழிகள் உள்ளன. ‘சங்கல்பித் பாரத், ஷசாக் பாரத்’ என்று முகப்பில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது தேர்தல் அறிக்கை. பாரதத்திற்கான உறுதிமொழி என்று சொல்லப்படுகிறது.
 

bjp

 

2014 பாஜக தேர்தல் அறிக்கைக்கும் இந்த வருடம் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைக்குமான வித்தியாசம் அட்டைப்படத்தில் இருந்தே தொடங்குகிறது. 2014 அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோசி ஆகியோர் படங்கள் இடம் பெற்றிருந்தன. அட்டைப்படத்தின் கீழே மோடி, மனோகர் பரிகார், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரின் படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்த வருடம் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் நரேந்திர மோடி ஒருவரின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் இந்த வருடம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் அட்டைப் படத்தில் மக்கள் கூட்டத்தை வைத்துள்ளது.
 

ஒரு புறம் ',மோடி அலை ஓய்ந்துவிட்டது' என்று எதிர்க்கட்சிகள் முழங்க இந்த பொதுத் தேர்தலில் பாஜக மீண்டும் மோடியை முன் நிறுத்துவதை பார்த்தால் மோடி அலை மீது தற்போதும் பாஜக நம்பிக்கை வைத்திருக்கிறது அல்லது நரேந்திர மோடிதான் பாஜக என்ற நோக்கில் கட்சி மாறிவிட்டது என்றே தோன்றுகிறது.

 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.