Skip to main content

16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழர்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஃபொடோர்சக்கை வீழ்த்தி தரவரிசைப் பட்டியலில் 2500 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார் 16 வயதான ஈரோட்டை சேர்ந்த இனியன் பன்னீர்செல்வம். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான முழுத்தகுதிகளைப் பெற்றார். இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இனியன். 

 

iniyan

 

பிரபல செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் இனியனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 1987-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவாரா என்று நினைத்தோம். ஆனால் தற்போது மாதம் ஒரு கிராண்ட் மாஸ்டர் உருவாகிக்கொண்டே உள்ளார்கள் என்று ஆனந்த் கூறினார். 

 

இனியனுக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பாக டிசம்பர் 2015-ஆம் ஆண்டு முதல் ஸ்பான்சர் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் சுகாதார மேலாண்மை, தண்ணீர் மேலாண்மை மற்றும் பல சமூக சேவைகளை செய்து வருகிறது ஒளிரும் ஈரோடு அமைப்பு. அதே நேரத்தில் இந்த அமைப்பு ஈரோட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க ஊக்குவித்து வருகிறது.  
 

ஒளிரும் ஈரோடு அமைப்பின் ஆதரவு மூலம் வெளிநாட்டில் கிட்டத்தட்ட 45 சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் விளையாட முடிந்தது என்று இனியன் தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக விஸ்வேஸ்வரன், இனியனுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இவரின் பயிற்சி தான் இனியனுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல பெரிதும் உதவியாக இருந்தது. இனியன் ஈரோட்டிலுள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துகொண்டு உள்ளார்.  

 

இனியனின் தந்தை நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இனியன் தனது 5 வயதிலிருந்து செஸ் விளையாடி வருகிறார். 6 வயது இருக்கும்போது திருமுருகன் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் சக்திவேல் என்பவரிடம் பயிற்சி பெற்றார். இனியனின் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து பயிற்சி பெற்று வந்தார். வாரத்திற்கு மூன்று முறை பயணம் செய்து சக்திவேல் அவர்களிடம் பயிற்சி பெற்றார். சக்திவேல் பயிற்சியின் கீழ் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் அண்டர்-8 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

 

iniyan

 

இனியனின் குடும்பம் பல சோதனை காலங்களில் இனியனுக்கு உறுதுணையாக இருந்தது. 2010-ஆம் ஆண்டு விசா தொடர்பாக ஒரு பிரச்சனையை எதிர்கொண்டார். டிராவல் ஏஜென்ட்டின் தவறான கருத்துப் பரிமாற்றத்தால் இனியன் டெல்லியில் உள்ள கிரேக்க தூதரகத்தில் நடந்த நேர்காணலை தவறவிட்டார். ஆனால் அதிர்ஷ்டம் அவரது பக்கத்தில் இருந்தது. பல வீரர்களின் விசா நிராகரிக்கப்பட்டது. அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) மேற்கொண்ட முயற்சியில் எட்டு மணி நேரத்திற்கு முன்னர் இனியனுக்கு விசா கிடைத்தது. கிரீஸில் நடைபெற்ற அந்த தொடரில் வெண்கலம் வென்றார். 
 

2016-ஆம் ஆண்டு லோர்கா ஓபன் செஸ் தொடரில் இனியனின் லேப்டாப் திருடப்பட்டது. லேப்டாப்பில் இனியனின் பிளஸ், மைனஸ், 7 வயதிலிருந்து இனியன் பற்றிய தகவல்கள், மற்ற வீரர்களின் பிளஸ், மைனஸ், பயிற்சியாளர் விஸ்வேஸ்வரனின் வழிகாட்டுதல்கள் போன்றவை இருந்தது. ஆனால் அந்த இழப்பையும் தாண்டி அந்த தொடரில் 2590 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். 

 

இந்தியாவில் 1987-ஆம் ஆண்டு வரை செஸ் போட்டிகளில் ஒருவர்கூட கிராண்ட் மாஸ்டர் இல்லை. 1988-ல் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இன்று 61 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள். ரஷ்யர்கள் மட்டுமே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வந்த செஸ் போட்டிகளில், இந்தியாவை உலக அரங்கில் தனிமுத்திரை படைக்க வைத்தவர் விஸ்வநாதன் ஆனந்த்.

 

செஸ் விளையாட்டில் இந்திய அணி ஆண்கள் பிரிவில் நான்காவது இடத்திலும், பெண்கள் பிரிவில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 1991-ல் உலகின் சிறந்த டாப் 10 செஸ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஆனந்த், இன்றும் அந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.