Skip to main content

41 வருட ஏக்கம் முடிவுக்கு வந்தது - வெண்கலம் வென்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

INDIAN MEN HOCKEY TEAM

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார். மேலும்,  இந்தியாவின் ரவிக்குமார் தஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

 

இந்தநிலையில், ஆண்களுக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்திற்காக ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்தியா ஜெர்மனியை 5 - 4 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

 

இந்த வெற்றியின் மூலம், இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் 41 வருடங்களுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 1980ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.