Skip to main content

கர்நாடக இசையில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா? - விளக்குகிறார் ஹோத்ரா

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Are there so many things in Carnatic music?- Explains Hotra!



'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவரும், பரத நாட்டிய கலைஞருமான ஹோத்ரா சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கர்நாடக இசையில் ஐந்து ஸ்தாயி இருக்கிறது. அதில் மத்திய ஸ்தாயி, தார ஸ்தாயி, மந்திர ஸ்தாயி, அதித்தார ஸ்தாயி, அனுமந்திர ஸ்தாயி ஆகியவை அடங்கும். இவையெல்லாம் வீணை மற்றும் மற்ற வாத்தியங்களில் வாசிக்க முடியுமே தவிர, நிரூபணம் செய்ய முடியாது. நவராக மாளிகை வர்ணத்தில் மட்டும் தான் அனுமந்திர ஸ்தாயி, அதித்தார ஸ்தாயி  உள்ளது. 

 

நாங்கள் படிக்கும்போது ஒரு வருடத்திற்கு 60 ராகங்கள் படிக்க வேண்டும்; 60 ராக லட்சணங்களைக் குறித்து படிக்க வேண்டும்; 60 கீர்த்தனைகள் குறித்து கட்டாயம் படிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு தியாகராஜர், சங்கீத மும்மூர்த்திகள், தேவாரம் நால்வர் உள்ளிட்ட 60 இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறை நாங்கள் படிக்க வேண்டும். அவ்வளவு விசயங்களை சங்கீதத்தில் கற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவ, மாணவிகள் தனியார் இசைப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ஐந்து ராகம் மட்டுமே கொடுக்கிறார்கள்.

 

அதுவும், எந்தெந்த ராகங்கள் என்பது குறித்து நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளது. இந்த அளவுக்கு ஏன் பாடக் குறைப்பு ஏற்பட்டது?, நாங்களே குறைவாக தான் படித்தோம் என்று வேதனைப்படுகிறோம். லட்சக்கணக்கான ராகங்கள் வெளியே வந்திருக்கிறது. அவ்வளவு ராகங்கள் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. மற்றொன்று பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களது சிஷ்யர்களுக்கு கற்றுக் கொடுப்பதேயில்லை. தங்களுக்கு தெரிந்த நுணுக்கங்களை சிஷ்யர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை? அதனால்தான் கர்நாடக இசை அழிந்து வருகின்றது என்று சொல்கிறேன். 

 

கலை கலையாக மதிக்கப்படாமல் தொழிலாக மாற்றப்படுகிறது. அந்த காலத்தில் கர்நாடக இசை என்றால் பயந்து கொள்வார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கர்நாடக இசையை அனைவரும் படிக்கிறார்கள். எனினும், இந்த காலக்கட்டத்தில் ஒரு ராகம் பாடினால் பாஸ் என்கிறார்கள். அதனால் தான் கர்நாடக இசையின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. தேய்ந்து கொண்டே வருகிறது. இசை வித்வான்கள் எல்லாம் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் கலைஞர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்?

 

எத்தனை பி.ஏ.மியூசிக் முடித்தவர்களும் எம்.ஏ. மியூசிக் முடித்தவர்களும் கல்லூரிகளுக்குச் சென்று இசைப் படிப்பு படிப்பவர்களும் கச்சேரி நடத்துகிறார்கள். கச்சேரி நடத்த தைரியம் இருக்கா? இன்றைக்கு தேவாரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை." இவ்வாறு ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
 

 

Next Story

ஆளுநர் மாளிகை சம்பவம்; கூடுதல் ஆணையர் விளக்கம்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இதுதான் உண்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர் மொத்தமாக நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும், ஏ பிளஸ் குற்றவாளியாக கருக்கா வினோத் இருந்துள்ளார்.

 

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகள் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டது.

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

தொடர்ந்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது. மது போதையில் தவறுதலாக ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

Next Story

இசை நிகழ்ச்சியில் தாக்குதல்; சிதறிக் கிடந்த 260 உடல்கள்;கண்ணீர் வடிக்கும் எல்லை மக்கள்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Assault at concert venue; 250 bodies scattered; Tearful Israel

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இருதரப்பும் மோதி வரும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 260 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை மீட்ட அரசு சாரா அமைப்பினர் இது குறித்து தங்களது வேதனையைப் பதிவு செய்துள்ளனர்.

 

ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்த சூப்பர் நோவா இசை நிகழ்ச்சியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட புத்தர் சிலையின் கீழ் நடனமாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 'அமைதிக்கான இசை நிகழ்ச்சி' என்று நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இஸ்ரேல் குடிமக்களைத் தவிர வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டார்கள். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே சிறு விமானம் போன்ற கருவிகள் மூலமாக ஹமாஸ் குழுவினர் எல்லையைக் கடந்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் இறங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றனர் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.