Skip to main content

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க மலைப்பாம்பை ரயிலில் எடுத்துச் சென்ற இளைஞர்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

vnb

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடு வரை அனைவரும் தனிநபர் இளைவெளி, முகக் கவசம் அணிதல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதாகக் கூறி மெட்ரோ ரயிலில் மலைப்பாம்புடன் ஏறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவரை விட்டு வெகுதூரம் தள்ளி நின்று ரயிலில் பயணித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்