Skip to main content

முடக்கப்படுகிறதா மல்லையா சொத்து??!! மகிழ்ச்சியில் வங்கிகள்!!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

 

mallaya

 

 

 

விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்கள் முடக்க  பிரிட்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் 9000 கொடிக்கும்மேல் கடன்வாங்கி அவற்றை திரும்ப செலுத்தமுடியமல் லண்டனுக்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்ய இருப்பதாக பிரிட்டன் கோர்ட் தெரிவித்துள்ளது.

 

 

 

 

இந்திய கடன் மீட்பு தீர்பாணையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பைரன், பிரிட்டனிலுள்ள மல்லையாவின் சொத்துக்களை ஆய்வு செய்யவும் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து லண்டனுக்கு அருகிலுள்ள ஹேர்ட்போர்டுஷர் பகுதியிலுள்ள விஜய் மல்லையாவிற்கு சொந்தமான வீடுகள் மற்றும் விடுதிகள் ஆகியற்றை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்யவுள்ளனர்.

 

இந்த நடவடிக்கையால் மல்லையாவிற்கு கடன் கொடுத்து பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. 

சார்ந்த செய்திகள்