Skip to main content

இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே 

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார்.  அதனையடுத்து இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

Mahinda Rajapaksa becomes the Prime Minister of Sri Lanka
 
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜபக்சே குடும்பத்தில் ஒருவரான கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதேநேரத்தில் ராஜபக்சே குடும்பத்தில் மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2005 ஆண்டுமுதல் 2015 ஆண்டு வரை மஹிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  

சார்ந்த செய்திகள்