Skip to main content

இங்கிலாந்து சென்ற இந்திய அணி வீரருக்கு கரோனா!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

cricket player

 

இங்கிலாந்து சென்றுள்ள இரண்டு இந்திய வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்குச் சென்ற இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வீரர்களுக்கும் லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு வீரர்களில் ஒருவருக்கு நெகட்டிவ் என வந்த நிலையில், பரிசோதனை செய்யப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் உட்பட ஏழு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்திய வீரருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்