Skip to main content

இறப்பைத் தடுக்கும் கரோனா மாத்திரை - அனுமதிக்கு முன்னரே ஆர்டர் கொடுத்த பிரிட்டன்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

pfizer

 

உலகை அச்சுறுத்தும் கரோனாவிற்கு எதிராக இதுவரை தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதுவரை கரோனா சிகிச்சைக்கென பிரத்தேயகமாக எந்த மருந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில் ஏற்கனவே கரோனா தடுப்பூசி ஒன்றைத் தயாரித்துள்ள பைசர், தற்போது மாத்திரை ஒன்றையும் உருவாகியுள்ளது.

 

பாக்ஸ்லோவிட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாத்திரையைக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனையில், கரோனா பாதிப்பு தீவிரமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அல்லது மரணமடைவது ஆகிய நிகழ்வுகளை பாக்ஸ்லோவிட் 89 சதவீதம் வரை குறைக்கிறது எனத் தெரியவந்துள்ளதாக பைசர் நிறுவனம் கூறியுள்ளது.

 

பாக்ஸ்லோவிட் என்பது ஒரு ஆன்டிவைரல் மருந்தும், எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரிடோனாவிர் என்ற மருந்தும் இணைந்த கலவையாகும். இந்த மாத்திரைக்கு விரைவில் அவசரக்கால அங்கீகாரம் கோரி பைசர் நிறுவனம் விண்ணப்பிக்கவுள்ளது.

 

இதற்கிடையே பிரிட்டன் நாடு, பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு தற்போதே பெருமளவில் ஆர்டர் அளித்துள்ளது. மேலும் தங்களது மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, பாக்ஸ்லோவிட் மாத்திரையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்யும் என்றும் அந்தநாடு கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; ஹாலிவுட்டையே மிஞ்சும் ரியல் ஹைஜாக்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

A ship stuck in the middle of the sea; a real hijack that surpasses Hollywood


நடுக்கடலில் கப்பல் ஒற்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் ஹைஜாக் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரிட்டனை சேர்ந்த தனியார் நபரின் 'கேலக்ஸி லீடர்' என்ற கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜப்பானிய நிறுவனம் இயக்கிவந்த இந்த கப்பலை ஹெலிகாப்டர் மூலம் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென கப்பலில் இறங்கி கப்பல் கேப்டனை துப்பாக்கி முனையில் மிரட்டி, கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பலை ஹைஜாக் செய்தது யார் என்று தெரியாத நிலையில், ஹவுதி நாட்டின் டிவி சேனல்களில் கப்பலை ஹைஜாக் செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தையும் தாண்டும் அளவிற்கான இந்த ரியல் ஹைஜாக் காட்சிகள் உலக அளவில் பேசுபொருளாகி வருகிறது.

 

இந்நிலையில் கப்பலில் சிக்கியுள்ள 25 குழுவினர்களும் இஸ்லாமிய சட்டப்படி நடத்தப்படுவர் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.