Skip to main content

"மோடி பதவியில் உள்ளவரை அது நடக்காது"... அப்ரிடி பேச்சு...

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

இந்தியாவில் மோடி பதவியில் இருக்கும் வரை, அந்நாட்டுடனான பாகிஸ்தானின் உறவு மேம்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

 

afridi about modi and india pakistan relationship

 

 

இணையதளம் ஒன்றிருக்கு பேட்டியளித்த அப்ரிடியிடம், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெறும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மோடி பதவியில் இருக்கும் வரை, இந்தியாவிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது. எதிர்மறை விஷயங்களை சார்ந்தே மோடியின் சிந்தனை இருக்கிறது.  

ஒரே ஒரு நபரால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு  சிதைக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்ப்பது இது அல்ல. எல்லையின் இருபுறமும் உள்ள மக்கள் இரு நாட்டிற்கும் பரஸ்பரம் பயணிக்க விரும்புகின்றனர். ஆனால் மோடி என்ன விரும்புகிறார்  அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என தெரிவித்தார்.  
 

 

 

சார்ந்த செய்திகள்