
சிதம்பரம் அருகே ஆடுர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(32). இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பாலமுருகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரிடம் ஒரு மகனை விட்டுவிட்டு மீதியுள்ள குழந்தைகளுடன் அவரது மனைவி பச்சையம்மாள் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னாகம்பூண்டியில் உள்ள அவரது சித்தப்பா மகன் ஜீவா(25) என்பவரின் வீட்டில் கடந்த 15 தினங்களாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி இரவு 3 வயது இளைய மகள் மயக்கம் போட்டு விழுந்ததாகவும் அவரை திண்டிவனம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தபோது இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு இறந்த குழந்தையை தனது தோளில் போட்டுக்கொண்டு பச்சையம்மாள் கடலூருக்கு வந்துள்ளார். அப்போது உறவினர்கள் குழந்தையின் உடல் மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பச்சையம்மாளில் சித்தப்பா மகன் ஜீவா 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீவாவை போலீசார் இன்று(20.6.2025) கைது செய்து திருவண்ணாமலையிலிருந்து கடலூருக்கு அழைத்து வந்தனர். அப்போது, கடலூர் அருகே குமத்தான்மேடு சோதனை சாவடி அருகே சிறுநீர் கழிப்பதாக கூறி வாகனத்தை விட்டு இறங்கிய பாலத்தின் மேலிருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது ஜீவாவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் போலீசார், கடலூர் அரசு மருத்துவமனையில் அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.