Skip to main content

அணைக்கட்டில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி! 

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

youngster passes away in cuddalore district anaikattu river

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள துறையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மகன் சூர்யா (21). இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். 

 

கடந்த சில தினங்களாக பெய்துவந்த கனமழையின் காரணமாக பெலாந்துறை அணைக்கட்டில் அதிக அளவில் மழைநீர் வந்தது. இதன் காரணமாக அணைக்கட்டில் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது. இதனைப் பார்ப்பதற்கும் அணைக்கட்டில் குளிப்பதற்கும் இளைஞர்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று (10/01/2021), சூர்யாவும் தனது நண்பர்களுடன் அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சூர்யா குளித்து கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் சூர்யாவைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தனர். 

 

youngster passes away in cuddalore district anaikattu river


சுமார் ஒருமணி நேரமாக போராடிய நண்பர்கள், சூர்யாவை மீட்டு அங்கிருந்து பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த தனியார் மருத்துவர், சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக சூர்யாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூர்யாவின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது தகவல் அறிந்து வந்த பெண்ணாடம் போலீசார், உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர். இதனால் சூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன், சூர்யாவின் பெற்றோரிடம் சமாதானம் செய்து அவரது உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.