Skip to main content

மூதாட்டியை அறையில் பூட்டிவிட்டு கொள்ளையடித்த பெண்! 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

The woman who locked the old woman in the room and robbed her!

 

மூதாட்டியிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 35 பவுன் தங்க, வைர நகைகளை திருடிச் சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

திருச்சி மாவட்டம், துறையூர் கூட்டுறவு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி விஜயகுமாரி (79). இவரின் மகன் ஸ்ரீதர் சேலத்தில் நகை கடை வைத்துள்ளார். மகள் ராணி தனது தாயார் விஜயகுமாரியுடன் வசிக்கிறார். 

 

இந்நிலையில் நேற்று (9ம் தேதி) மாலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வீடு வாடகைக்கு கேட்டு வந்துள்ளார். அந்தப் பெண் மூதாட்டி விஜயகுமாரியிடம் வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அவரின் மகள் ராணி சமையல் அறைக்கு சென்றார். அப்போது மூதாட்டி விஜயகுமாரியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. தனியறையில் இருந்த செல்போனை எடுத்து பேசிக்கொண்டிருந்த போது, வந்திருந்த மர்மப் பெண் அறையின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டார். சிறிது நேரத்திற்கு பின் சமையலறையிலிருந்து வந்த ராணி கதவைத் திறந்துவிட்டு உங்களிடம் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் எங்கே என்று கேட்டார். 

 

இருவரும் முன்னறைக்கு வந்து பார்த்தபோது அலமாரி திறந்து அங்கு வெல்வெட் பையில் வைத்திருந்த 3 செயின், 4 வளையல், 3 வைர மோதிரம், 1 ஜோடி வைரத்தோடு உள்ளிட்ட 35 பவுன் நகைகளை மர்ம பெண் திருடி சென்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடம் சென்ற துறையூர் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.