Skip to main content

பிரபல திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் சடலம்; போலீசார் விசாரணை

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

  water tank of famous theatre; Police investigation

 

கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் உள்ள தண்ணீர் தொட்டியில் திரையரங்கில் வேலை பார்த்து வந்த எலக்ட்ரீசியன் சடலமாக மிதந்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சென்னை கோயம்பேட்டில் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பார்க்கிங் பகுதியில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக லாரி வந்திருந்தது. அப்பொழுது தண்ணீர் தொட்டியில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தெரிந்தது. உடனடியாக லாரி ஓட்டுநர் ராமலிங்கம் திரையரங்க உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து சடலத்தை கைப்பற்றினர். சடலமானது அழுகிய நிலையிலிருந்தது தெரியவந்தது. தண்ணீர் தொட்டிக்குள் சடலமாகக் கிடந்தவர் திரையரங்கில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த வெங்கடேச பெருமாள் என்பது தெரியவந்தது.

 

கடந்த 26ம் தேதி வேலைக்கு வந்த வெங்கடேச பெருமாள் தண்ணீர் தொட்டியை பராமரித்த பொழுது மதுபோதையில் உள்ளே விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. யாரும் கவனிக்காததால் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலானது கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.