Skip to main content

தமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை! முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!!

Published on 19/08/2019 | Edited on 20/08/2019

தமிழகத்தில் கூடுதலாக ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டத்தை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19), முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த இவ்விழாவில், முதல்வர் பேசியதாவது:


முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் பொதுமக்கள் பயனடைய முடியும். 234 தொகுதிகளிலும் இத்திட்டம் இன்று முதல் (ஆக. 19) செயல்படுத்தப்படும். பொதுமக்கள் அதிகாரிகளை தேடிச்சென்று மனு கொடுத்த நிலை மாறி, அதிகாரிகளே மக்களை தேடிச்சென்று மனு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இது தவிர, பட்டா கேட்டு பலரும் மனு கொடுத்துள்ளனர். இவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்.


பொதுமக்கள் ஏற்கனவே வழங்கிய பெரும்பாலான கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எடப்பாடியில் சரபங்கா நதியின் இரண்டு புறமும் சீர் செய்ய கோரிக்கை வைத்து இருந்தனர். இதை ஏற்று, இரண்டு கரையோரங்களும் சீரமைக்கப்படும். தமிழகத்தில் தொழில்வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் 565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் உபரிநீர் கொண்டு வந்து நிரப்பப்ப டும். குடிமராமத்து பணிகளும் நடந்து வருகின்றன.


 

tamilnadu old peoples pension extend 5 laks peoples cm edappadi palanisamy announced




 


தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது. இன்னும் மீதம் ஐந்து அடி உள்ளது. விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும். இதன்மூலம் விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, சரோஜா, மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


திருச்செங்கோடு - ஓமலூர் நான்குவழி சாலை:


இதையடுத்து கொங்கணாபுரத்தில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது அவர் பேசுகையில், ''எடப்பாடி பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சில பகுதிகள் கூட்டுக்குடிநீர்  திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளும் விரைவில் சேர்க்கப்படும். புறவழிச்சாலை வேண்டும் என்று மக்கள் கேட்டுள்ளதும், நிறைவேற்றப்படும். தவிர, திருச்செங்கோடு - ஓமலூர் செல்லும் சாலை நான்குவழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. 


ஓசூரில் சர்வதேச ஏல மையம் 20 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு விவசாயிகள் பூக்களைக் கொண்டு வந்து விற்கலாம். தமிழகம் முழுவதும் கிராம சாலைகள் புதிய சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழகம் மருத்துவத்துறையிலும், கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது,'' என்றார்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.