Skip to main content

கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு- இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவராக இயக்குநர்களால் தேர்வு செய்யப்பட்டவர் வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார். அமைச்சர் நிலோபர் கபிலில் ஊரில், கூட்டுறவு சங்க தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் பிடித்தார்.
 

இந்நிலையில், அதே கூட்டுறவு சங்கத்தில் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்த திமுகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களுக்கும், தலைவர்க்கும் தனிப்பட்ட காரணத்தால் மோதல் வந்தது. அவர்கள் சில காரணங்களை குறிப்பிட்டு திமுக இயக்குநர்கள் இருவர் கூட்டுறவு சங்க செயலாளருக்கு கடிதம் தந்துயிருந்தனர். இதனை அறிந்த அதே சங்கத்தில் இயக்குநர்களாக உள்ள அதிமுக பிரமுகர்கள் இந்த விவகாரத்தை அமைச்சர் நிலோபர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இரண்டு மாதத்துக்கு முன்பு, சங்க தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் தந்தனர் அதிமுகவை சேர்ந்த இயக்குநர்கள்.

 A vote of confidence in the office of the Co-operative Society

இதுப்பற்றி கூட்டுறவுத்துறை பதிவாளர் விளக்கம் கேட்டு சாரதிகுமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை மையமாக வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் தலைவரான சாரதிகுமார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 12ந்தேதி நடைபெற்றது. விசாரணையின் முடிவில், டிசம்பர் 13ந்தேதி காலை 11.00 மணிக்கு நகர கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுயிருந்தனர். இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறுவதற்கு திடீரென இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதோடு, திமுகவை சேர்ந்த இரண்டு இயக்குநர்கள் தந்துள்ள கடிதத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.