Skip to main content

மூன்று பேரை திருமணம் செய்த இளம்பெண்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

villupuram district  incident police investigation started 

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் புதுச்சேரி திருபுவனை பாளையத்தைச் சேர்ந்த ரம்யாவிற்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

 

இந்நிலையில், தோழியைச் சந்திக்கப் போவதாக கண்ணனை அழைத்து சென்ற ரம்யா வேடசந்தூரில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 3 மாதங்களுக்குப் பிறகுதான் ரம்யாவுக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் நடந்தது கண்ணனுக்கு தெரியவந்தது. இருப்பினும், கண்ணன் ரம்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். கர்ப்பமடைந்த ரம்யாவுக்கு வளைகாப்பு செய்து அவரின் தாய் வீட்டிற்கு கண்ணன் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, குழந்தை இறந்து பிறந்ததால் அடக்கம் செய்துவிட்டதாக கண்ணனிடம் ரம்யா தெரிவித்திருக்கிறார். அதனால் கண்ணன் ஒரு மாதம் ரம்யாவை தாய் வீட்டிலேயே இருக்க வைத்து விட்டுச் சென்றிருக்கிறார். அதன்பின் ஒரு மாத காலம் ஆன பிறகு ரம்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல கண்ணன் வரவே, ரம்யா ஏமாற்றி விட்டு தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது.

 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டு இருந்த கண்ணன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பைக்கில் புதிதாக ஒரு இளைஞருடன் தனது மனைவி ரம்யா செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அந்த பைக்கை வழிமறித்து விசாரித்த போது ரம்யா கண்ணனை பார்த்து யார் நீ எனக் கேட்டுள்ளார். இவ்விவகாரம் காவல்நிலையம் சென்றதையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, நான் கண்ணனோடு இருந்த போது கர்ப்பமாகவில்லை. அது வெறும் நீர்க்கட்டி என ரம்யா தெரிவித்திருக்கிறார். இதனிடையே மூன்றாவது திருமணம் செய்து  கொண்ட இளைஞர் ரம்யாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

இதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட போலீசார் ரம்யாவின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கின்றனர். பட்டதாரியான இந்த இளம் பெண் மூன்று வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.