Skip to main content

மழை நீர் தேங்கிய சாண குட்டையில் தவறி விழுந்த இரண்டு சிறுமிகள் பலி. 

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக அதிக கனமழை பெய்து வருகிறது. அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கொல்லைமேடு கிராமத்தில் வேலு என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மாடு, ஆடுகளின், சாண எருவு கொட்ட பள்ளம் தோண்டி வைத்துள்ளார். அதில் பாதியளவுக்கு மேல் சாணங்கள் கொட்டப்பட்டு இருந்துள்ளன. அந்த பள்ளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையால் நீர் தேங்கியிருந்தது. 
 

ஆகஸ்ட் 19-  ந்தேி தேங்கிய மழை நீரில் அதே ஊரை சேர்ந்த 3 வயதான பிரித்திகா, 6 வயதான ஹரிணி என்கிற இரண்டு குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்படி சென்றபோது, வேலுவின் நிலத்தில் தோண்டி வைக்கப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளனர். அவர்களை உள்ளிருந்த சாணம் உள்ளே இழுத்துக்கொண்டுள்ளது. 

 

 

vellore district heavy rain continue day by day two childrens incident

 

இரண்டு குழந்தைகள் நடந்து சென்றவர்கள் திடீரென காணாமல் போனதை பார்த்து, பெற்றோர் அருகில் உள்ள இடங்களில் தேடினர். அப்போது ஒரு குழந்தை மட்டும் அந்த பள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தது. அதனை பார்த்த பெற்றோர் மற்றும் அருகில் உள்ள மக்கள் நீரில் மூழ்கிய அந்த குழந்தைகளை வெளியே இழுத்து தரையில் வைத்து முதலுதவி செய்துள்ளனர். 
 

ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. அந்த குழந்தைகளின் பெற்றோர் அலறி துடித்து அழுதனர். இதுப்பற்றிய தகவல் வருவாய்த்துறையினர் மூலமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கவனத்துக்கு சென்றது. உடனே அவர் உயிரிழந்த சிறுமிகளின் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தியவர், குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.  இது தொடர்பாக அறிக்கை பெற்று அரசாங்கத்திற்கு அனுப்பி அரசின் நிதியுதவி பெற்று தருவதற்காக பணியில் ஆட்சியர் ஈடுபட்டுள்ளார் என்றனர் விவரம் அறிந்த அதிகாரிகள். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.