Skip to main content

113 வருடங்கள் பழமையான கிளப்பை இடிக்க முடிவு! - சேவைக்காக ஆரம்பித்து சூதாட்டத்தில் முடிந்த கதை!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

 

திருச்சி கண்டோன்ட்மென்ட் பகுதியில் அமைந்துள்ள யூனியன் கிளப்-ஐ இடிப்பதற்காக இன்று காலை ஜே.சி.பி. இயந்திரம், பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அக்கிளப்பிற்கு முன்னால் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பானது. 

 

திருச்சி கண்டோன்ட்மென்ட் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கிளப்-ன் வரலாறு என்ன என்று பார்ப்போம். கடந்த, 1907 ஆண்டு  சமூகப் பணிக்காக அரசிடம் இருந்து ஓன்றரை ஏக்கர் நிலத்தை டி.தேசிகாச்சாரியார் உள்ளிட்ட சில நிர்வாகிகள் சேர்ந்து வாடகைக்குப் பெற்றனர். அதோடு பல்வேறு அறைகள் கொண்ட நல்ல உறுதியான ஒரு கட்டிடத்தைக் கட்டி அதற்கு ‘யூனியன் கிளப்’ என்று பெயரிட்டனர். 

 

சமூக தொண்டு செய்ய வாங்கப்பட்ட அந்த இடத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை செய்துகொடுத்து சேவை செய்துவந்தது. ஆனால், நாளடைவில் அது விளையாட்டு அரங்கமாக மாறிவிட்டது. 1907ல் இருந்து 1931 வரை தேசிகாச்சாரியாரே இந்த கிளப்பின் தலைவராக இருந்தார். சிவஞான முதலியார் இந்த கிளப்பின் செயலாளராக இருந்தார். ஆரம்பத்தில் 25 பணக்காரர்களையும், நில மிராசுதாரர்களையும், ஜமின்தாரார்களையும் கொண்டு துவங்கப்பட்ட இந்த கிளப்பில், தேர்தல் நடத்தி அதன்மூலம் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

 

1907ல் துவங்கி இன்று வரை மொத்தம் 113 வருடங்கள் கடந்தும் இன்று அதன் வடிவமைப்பு மாறாமல் இருக்கிறது. மேலும், விளையாட்டுகளை மேம்படுத்தும் விதமாக டென்னிஸ், டேபுள் டென்னிஸ், பில்லியாட்ஸ், உள்ளிட்ட விளையாட்டுகள் மேம்படுத்தப்பட்டு, பல தேசிய அளவிலான வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கியது. ஆனால், நாளடைவில் இந்த கிளப் திருச்சி மாநகரில் உள்ள முக்கியப் புள்ளிகள், பணக்காரா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாகி, சூதாடுவது, மது அருந்துவது, உள்ளிட்ட பல்வேறு தவறான நடவடிக்கைக்குப் பயன்பட்டுவந்தது. 

 

இதனால் கடந்த 2019ல் வருவாய்த்துறை, காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் இணைந்து இந்த கிளப்பில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது இந்த கிளப்பில் சூதாடிக் கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்கள் சூதாட வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், இந்த கிளப் செயல்படுவதற்கான வாடகையை முறையாகச் செலுத்தவில்லை என்று கூறி கடந்த, 2021 பிப்ரவரி மாதம் வருவாய்த்துறை இந்த கிளப்பை பூட்டி சீல் வைத்தது. மேலும், அவர்கள் அந்த நிலுவைத் தொகையைச் செலுத்த கால அவகாசம் கொடுத்தும் எந்தவிதப் பணமும் செலுத்தாமல் இருந்துள்ளனர்.

 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 1970 வரை இந்த இடத்திற்கான வாடகையை முறையாகச் செலுத்திவந்த இந்த கிளப், 1971க்கு பிறகு வருவாய்த்துறைக்கு செலுத்தவேண்டிய தொகையை முறையாகச் செலுத்தாமல், நிலுவையில் போட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த கிளப்பின் செயலாளராக எம்.எச்.கான் மற்றும் தலைவராக யு.சி.சுரேந்திரநாத் உள்ளிட்டவர்கள் இருந்துள்ளனர். 1971 முதல் 2021 வரை என மொத்தம் 50 ஆண்டுகளாக இதற்கான வாடகை தொகை ரூ. 9 கோடி. அதனை முறையாகச் செலுத்தாமல் உள்ளனர். இந்த கிளப் ஆரம்பித்தபோது 25 நபர்களோடு துவங்கப்பட்டது. இன்று 450 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கிளப்பில் மாத சந்தாவாக 5ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர். கடந்த 2012 முதல் இந்த கிளப்பிற்கு என்று ஒரு முறையான தேர்தல் நடத்தி செயலாளர் மற்றும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ள நிலையில், வருவாய்த்துறையில் இருந்து தொடர்ந்து பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்தனர். 

 

மேலும், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் யூனியன் கிளப் கட்டிடத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. அதோடு கட்டிடத்தை இடிப்பதற்கான ஆயத்தப்பணிகளும் துவங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே அந்த கிளப் கட்டிடத்தை இடிக்க ஜேசிபி இயந்திரம், லாரிகள் என வாகனங்கள் தயாராக உள்ளது. மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பிற்குக் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.