Skip to main content

விபத்தில் பலியானவரின் உடலை முட்புதரில் வீசிய பயங்கரம்! சிக்கிய தெலங்கானா சுற்றுலா பயணிகள்!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

நெல்லை மாவட்டத்தின் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை செல்கிற மூன்றடைப்பு அருகிலுள்ள ஆயநேரி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி, மீன் வியாபாரம் செய்து வருபவர். அவருக்கு ராசம்மாள் மாரியம்மாள் என இரு மனைவிகள், நீலாவதி, செல்வி என இரு மகள்களும் உள்ளனர்.

 


நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல் பாண்டி தன் இரு சக்கர வாகனத்தில் மீன் வியாபாரத்திற்குச் சென்றார். ஆயநேரி குளக்கரையை ஒட்டிய நான்கு வழிச்சாலையில் அவர் வரும் போது, கன்னியாகுமரியை நோக்கிச் சென்ற டிரக்கர், பாண்டியின் மீது மோதியதில் டூவீலரோடு தூக்கி வீசப்பட்ட பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். பீதியாகிப் போன டிரக்கரை ஓட்டிவந்த டிரைவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தையடுத்த சம்பாபேடு கேசன் நகரைச் சேர்ந்த ரமேஷ்கவுடு, உடன் வந்த சுற்றலா பயணிகளான சிவகுமார் கவுடு, சாய் தேஜாச்சாரி ஆகியோர் சேர்ந்து பாண்டி உடலையும் அவரது டூவீலரையும் சாலையோரமுள்ள முட்பதரில் வீசிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்கள். 

 

accident

 

ஆனால் டிரக்கர் பழுதானதால் அவர்கள் அங்கிருந்து தப்பமுடியவில்லை. அந்த வழியாக வந்தவர்கள் தகவல் தர ஸ்பாட்டுக்கு வந்த மூன்றடைப்பு போலீசார்  சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போது டிரக்கரில் வந்தவர்கள் பழுது காரணமாக நிற்பதாக தெரிவிக்க, அதனை ஆராய்ந்த போலீசாருக்கு விபத்தில் வாகன சேத அடையாளம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சாலையில் சிதறிகிடந்த மீன்களும் சந்தேகத்தைக் கிளப்ப பயணிகளைக் காவல் நிலையம் அழைத்து வந்திருக்கிறனர்.

 



போலீசாரின் முறைப்படியான விசாரணையில் விபத்தை மறைக்க முயன்றதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகே புதரில் கிடந்த பாண்டி உடலையும், டூவீலரையும் கைப்பற்றினர் போலீசார். பாண்டி உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், வழக்குப்பதிவு செய்து தெலங்கானா மாநிலத்தில் ரமேஷ்கவுடு, தேஜாச்சாரி சிவகுமார் கவுடு மூவரையும் கைது செய்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Counterfeiting issue; Increase in the number of victims

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் (வயது 39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் (வயது 37) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.