Skip to main content

ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கண்மாய்களை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020

 

theni district lake and other lakes cleaning process deputy cm ops

தேனி மாவட்ட அதிமுக மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் பெரியகுளம் வட்டத்துக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி மருத்துவர் குளம் கண்மாய், மேலமங்கலம், நெடுங்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களைச் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

 

தமிழக அரசு மக்களின் வளர்ச்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைக்கும் பணியான குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது அதனடிப்படையில்  மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர் நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கழிவுகளை மறு கட்டுமானம் செய்தல் நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

theni district lake and other lakes cleaning process deputy cm ops

இது தவிர அதிமுக சார்பில்  தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் துணை முதல்வர் வழிகாட்டுதலின் படி தன்னார்வலர்களின் சார்பில் தேனி மாவட்டத்தில் 2020- 21 ஆம் ஆண்டு நிதியாண்டில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி, மேலமங்கலம் நெடுங்குளம், பொட்டலம், வண்ணான் குளம், லட்சியம்பட்டி குளம், ஆகிய கண்மாய்கள் பெரியாறு வைகை வடிநில கோட்டத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் பாதை கவுண்டன் குளம் கண்மாய், சிலமலை குளம் கண்மாய், சோழபுரம் கண்மாய், டீ புதுக்கோட்டை கட்டபொம்மன் குளம் கண்மாய், பல்லவராயன்பட்டி தாதன் குளம் கண்மாய், கோகிலாபுரம் தாமரை குளம் கண்மாய், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன் குளம் கண்மாய், தொப்பம்பட்டி கண்மாய், வரதராஜபுரம் அதிகாரிக்குளம் கண்மாய், தங்கம்மாள்புரம் கோவில் பாறை என மொத்தம் 12 கண்மாய்கள் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

theni district lake and other lakes cleaning process deputy cm ops

அதன் தொடர்ச்சியாக பெரியகுளம் வட்டத்துக்கு உட்பட்ட கெங்குவார்பட்டியில் உள்ள மற்ற ஆறு குளம் கண்மாய் மற்றும் மேல்மங்கலம் லட்சுமி எம்.பட்டி குளம் கண்மாய் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார். இதில் கெங்குவார்பட்டி மருத்துவர் குளம் கண்மாய் கரை ஆயிரத்து 330 மீட்டர் நீளத்திலும் 99.9 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவும் 17 புள்ளி 13 மி. கனஅடி கொள்ளளவு கொண்டது.

 

இதேபோன்று மேல்மங்கலம், நெடுங்குளம் கண்மாய் கரை ஆயிரத்து 920 மீட்டர் நீளத்திலும் 1467 புள்ளி முப்பத்தி ஒரு ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவும் 2.82 கனஅடி கொள்ளளவு கொண்டது. மேலும் கண்மாய்களில் உள்ள செடிகளை அகற்றி தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும் பணி மனையில் சட்டர் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு பணி சிமெண்டு எல்லைக் கற்கள் அமைத்து அளவீடு செய்யும் பணி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தண்ணீர் முழு கொள்ளளவை தேட வழி வகை செய்யும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி மருத்துவர் குளம் கண்மாய் மூலம் பாசன வசதி மற்றும் 18.6 பட்டர் ரெட்ட நிலங்களும் மேல்மங்கலம், நெடுங்குளம் கண்மாயின் மூலம் வரகா நதி அணைக்கட்டு வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று அதன் மூலம் விவசாயிகள் பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

theni district lake and other lakes cleaning process deputy cm ops

இதனை தொடர்ந்து மேற்கண்ட பல்வேறு பகுதிகளில் குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அன்பர் பணி செய்யும் திருப்பணி குழு தலைவர் ஜெயபிரதீப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, பெரியகுளம் சார்பதிவாளர் சினேகா, பொதுப்பணித்துறை மஞ்சள் அறுவடைகள், வடிநில கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், பெரிய குளம் வட்டாட்சியர் ரத்னமாலா, அரசு ஒப்பந்ததாரர் பாண்டியராஜன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.