Skip to main content

ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்த ப.சிதம்பரத்திற்கு பயம் ஏன்? அமைச்சர் கேள்வி.

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

விருதுநகர் மாவட்டத்தில் இன்று  குன்னூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர் போன்ற ஊர்களில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
   

"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்று கூறுவது சரிதான். ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்து சட்டம் பேசியவர்தான் ப.சிதம்பரம். இப்போது ஏன் பயப்படுகிறார்? அவர் நியாயமானவர் என்றால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். தேசிய வங்கியில் பணத்தைக் கொள்ளையடித்தவர்களைப் பார்த்து மோடி சும்மா இருக்கமாட்டார். பிறருடைய சொத்துக்களைத் தன் சொத்துக்களாக நினைக்கும் கட்சிகள்தான் காங்கிரசும் திமுகவும். ப.சிதம்பரமாக இருந்தால் என்ன? பாமர மக்களாக இருந்தால் என்ன? அனைவரும் ஒன்றுதான். சட்டம் தன் கடமையைச் செய்கிறது. 

 

TAMILNADU MINISTER KT RAJENDRA BALAJI QUESTION ASK IN P CHIDAMBARAM

 

காட்சியிலேயே இல்லாதவர் தினகரன். நானும் ரவுடிதான் என்று வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டிருக்கிறார். மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் இருப்பது ஒரே ஒரு குழுதான்.  அதுவும் கலைந்துவிட்டால் அவருடைய வேலை முடிந்துவிடும்.  பாண்டிச்சேரி பண்ணையில் பத்திரமாக இருந்துகொள்வார். 
 

எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரமுடியும். அப்போதுதான், அவர்கள் பலமாகவும், வளமாகவும் இருக்க முடியும். ஸ்டாலின் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவருடைய சொத்து குறித்து விளக்கம் அளித்துவிட்டு எங்கள் மீது புழுதிவாரி தூற்றட்டும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசுவதையே ஸ்டாலினும் பேசுகிறார். நமது பிரதமர் மோடியை எச்சரிக்கிறார் இம்ரான். 125 கோடி இந்திய மக்களின் தலைவரான பிரதமரை சுண்டைக்காய் பாகிஸ்தான் பிரதமர் மிரட்டுகிறார். அதைக் கைதட்டி ஆரவாரம் செய்யும் உளவாளிகள் கூட்டம்தான்,   திமுக, காங்கிரஸ் கூட்டம்.  இவர்களையெல்லாம்  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். இதற்காகப் போராடும் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.” என்று வழக்கம்போல் அதிரடியான கருத்துக்களை உதிர்த்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.