Skip to main content

"காசு..பணம்..துட்டு..மணி...விட்டில் பூச்சிகளாகும் ஆசிரியர்கள்..!"

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

"இந்த உலகத்துல பணம் சம்பாதிக்கற மாதிரி ஈஸியான வேலை வேற எதுவுமே இல்ல… அதுக்கு நீங்க ஒன்னே ஒன்னு தான் பண்ணனும்… உங்கள மாதிரியே நிறைய பணம் சம்பாதிக்கனும்னு பேரசை உள்ள ஒருத்தர கண்டுபிடிக்கனும்…" சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் இது.


இதை வேத வாக்காக எடுத்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந்த். ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் ரூ.8,000 வட்டி என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தார். அதேபோல், தமக்கு சிபாரிசு செய்யும் நபர்களுக்கு ரூ.10,000 வட்டி என வலைவீசி பணத்தை வாரிச் சுருட்டி வருகிறார்.
 

"ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டுமே ஆனந்திடம் பணம் கட்டிய நிலையில், இப்போது, நான் நீ என போட்டி போட்டு பணத்தை கட்டுகின்றனர். இதனால், ஆசிரியர் தொழிலை விட வட்டித் தொழிலில் அவர் அதிகம் கல்லா கட்டுகிறார். அவரிடம் பணம் கட்டும் 95 சதவீதம் பேர் நன்கு படித்த ஆசிரியர்கள். இது எங்கே போய் முடியுமோ?" என்று நம்மிடம் வேதனையை பகிர்ந்து கொண்டார் ராமநாதபுரத்தை சேர்ந்த நண்பர் ஒருவர்.

ramanathapuram teacher start on fake business peoples invest many crores

அவரே தொடர்ந்து, "சிலர் தங்களது சேமிப்பு பணத்தை மட்டுமின்றி நகைகளை அடகு வைத்தும் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கியும் இங்கு கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர். இவ்வாறு கொடுக்கும் பணத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடலாம். எத்தனை முறை இதுபோன்று ஏமாற்று வேலை நடப்பதாக செய்திகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் உழைக்காமல் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை கொட்டிக்கொண்டு இருக்கின்றனர்"என்று ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.
 

ஏழையா இருந்து நல்லவனா இருக்கறதுக்கும் பணக்காரனா இருந்து நல்லவனா இருக்கறதுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. இதை ஆனந்த் மாதிரியான ஆட்கள்கிட்ட பணத்தை கட்டுகிற அப்பாவிகள் உணர்ந்தால் சரி.!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.