
திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தவர் பாலமுருகன். திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வந்தார். பாலமுருகன் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று 12 மணியளவில் சென்ற வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என வீட்டிலிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாலையில் 4 மணி அளவில் மூன்று பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் பாலமுருகனை அரிவாளால் தலைப்பகுதியில் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.