Skip to main content

திவ்யபாரதியை ஜூலை 6 -ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை 

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
divya

 

ஆவணபட இயக்குநர் திவ்யபாரதியை ஜூலை 6 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ஆவண பட இயக்குனர் திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கக்கூஸ் படம் மற்றும் பல்வேறு ஆவண குறும்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது ஒகி புயல் பற்றிய "ஒருத்தரும் வரலை" என்ற ஆவணபடம் எடுத்துவருகிறேன். இதன் டீசர் வெளியிட்டுள்ளேன்.

 

இந்நிலையில் எனது வீட்டிற்கு போலிசார் வந்து துன்புறுத்துகின்றனர். மேலும் படம் சம்பந்தமாக ஆவணங்களை கேட்டு துன்புறுத்தி வருகிறார்கள். என்னை தேச துரோக  வழக்கில் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள் எனவே என்னை போலிஸ்சார் கைது செய்ய இடைகால  தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது" அரசு தரப்பில் திவ்யபாரதி மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு கூறியதை தொடர்ந்து இதை பதிவு செய்த நீதிபதி் வெள்ளிக்கிழமை ( ஜூலை 6 ) வரை திவ்யபாரதியை கைது செய்ய இடைகால தடை விதித்து வழக்கினை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கமலின் ஆசியுடன் பணிகளைத் தொடங்கிய ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்'

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

gv prakash 25th film kingston update

 

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ், நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தனுஷின் கேப்டன் மில்லர், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுகிறார். 

 

இந்த நிலையில் நடிகராக தற்போது 25வது படத்தில் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தில் ஏற்கனவே ஜி.வி. பிரகாஷுடன் ஜோடியாக நடித்த திவ்ய பாரதி நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றி இசைப் பணிகளையும் மேற்கொள்கிறார். கமல் பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். 

 

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் பூஜையில் கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். படத்திற்கு கிங்ஸ்டன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

 

 

Next Story

விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ஆசை' - இணையத்தில் வைரல்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

vignesh shivan released the first look poster of kathir divyabharathi aasai movie

 

'பரியேறும் பெருமாள்', 'பிகில்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கதிர் கடைசியாக 'சூழல்' என்ற வெப் தொடரின் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ஷிவ் மோஹா இயக்கத்தில் குமார் தயாரிப்பில் 'ஆசை' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதிருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார். இசைப்பணிகளை ரேவா என்பவர் மேற்கொள்கிறார். 

 

இந்நிலையில் 'ஆசை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கதிர் மற்றும் திவ்யபாரதி இருவரின் புகைப்படம் தலைகீழாக இருப்பது போல் அமைந்துள்ளது. ரொமான்டிக் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.