Skip to main content

'பஞ்சுமிட்டாயை அடுத்து பானி பூரியால் புற்றுநோய்'-ரெய்டுக்கு தயாராகும் உணவு பாதுகாப்புத்துறை

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Panipuri after panchamitai' - Food security department prepares for raid


அண்மையில் பஞ்சுமிட்டாயில் இடம்பெற்றுள்ள செயற்கை நிறமி புற்றுநோயை உருவாக்கும் கூறுகளைக் கொண்டது என கண்டறியப்பட்ட நிலையில் அவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செயற்கை நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் சோதனையை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அங்குள்ள பானி பூரி கடைகளில் மசாலாவில் கலந்துள்ள கலவைகள் குறித்து கேட்டறிந்தனர். முறையான அனுமதி பெற்று பானி பூரி கடை நடத்தப்படுகிறதா? என்ற ஆய்வு செய்த அதிகாரிகள், பானிபூரி, சாட் உணவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகளில் இருந்த பானி பூரி மசாலாவின் மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஒருவேளை புற்றுநோயை உருவாக்கும் நிறமிகள், ரசாயன ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கும் பானிபூரியில் ரசாயனங்கள் சேர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

'Panipuri after panchamitai' - Food security department prepares for raid

இந்த அதிரடி ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், ''சென்னையை பொறுத்தவரை இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளோம். இன்னும் மூன்று, நான்கு நாட்களுக்குள் சென்னை முழுவதும் ஆய்வு முடித்து விடுவோம். தமிழ்நாடு முழுக்க உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு அந்த மாதிரிகளின் அடிப்படையில் கிடைக்கும் முடிவுகளை வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நான் எங்கேயும் இப்படிப் பார்த்ததில்லை' - பானிபூரி வேட்டையில் அதிகாரி ஷாக்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 'I have never seen anything like this anywhere'- Officer Shock on panipuri hunt

அண்மையில் பஞ்சுமிட்டாயில் இடம்பெற்றுள்ள செயற்கை நிறமி புற்றுநோயை உருவாக்கும் கூறுகளைக் கொண்டது எனக் கண்டறியப்பட்ட நிலையில் அவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செயற்கை நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்திலும் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் சோதனையைத் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செட்டி வீதி பகுதியில் உள்ள 'ஸ்ரீபகவதி அம்மன் பானி பூரி' கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தமாகவும் சில்லறையாகவும் பானிபூரி விற்பனை செய்யும் கடையில் நடந்த ஆய்வில் அதிகாரிகளுக்கு பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தது.

 'I have never seen anything like this anywhere'- Officer Shock on panipuri hunt

கடையின் உள்ளே ஒரு பகுதியின் மூலையில் பானி பூரி கீழே தரைதளத்தில் கொட்டி வைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் கிடந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 'ஏங்க இப்படியா பானிபூரிய கீழ கொட்டி வைப்பீங்க? உங்களுக்கே நல்லா இருக்கா இதெல்லாம். சாப்பிடற பொருள் இப்படி கீழ தரையில் கொட்டி வச்சிருக்கீங்க. இதை அப்படியே எடுத்து கவரில் போட்டு கொடுத்து விட வேண்டியதுதானா? அட்லீஸ்ட் ஒரு ட்ரம் அல்லது பாலிதீன் கவருக்குள் போட்டு வைக்க வேண்டாமா?' என அதிகாரி கேள்விகளை எழுப்பினார். ''உடனே இதெல்லாம் சீஸ் பண்ணுங்க? எங்கேயுமே இப்படி பார்க்கலப்பா இப்படி கீழே கொட்டி வச்சிருக்கீங்க. நான் இதை விட சின்னதா பானி பூரி செய்ற இடத்தில் கூட ஆய்வு செய்யப் போயிருக்கேன். அவர்கள் கூட கீழே போட்டது கிடையாது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய்யை ஆய்வு செய்த அதிகாரி 'ஆயில பார்த்தாவே தெரியுது எத்தனை தடவை இதை யூஸ் பண்ணிருப்பீங்க. நீங்களே பாருங்க இந்த ஆயில் எப்படி இருக்குன்னு. ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் ஆயில பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு ஆயில் பயன்படுத்தி விட்டு பின்னர் அதனை அழித்துவிட வேண்டும் என்று எச்சரித்தார்.

Next Story

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்; அதிமுக போராட்டம் அறிவிப்பு! 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
ADMK struggle announcement for New laws brought into force 

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில், “புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், இந்த 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நாளை (05.7.2024) நண்பகல் 12 மணிக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.