Skip to main content

கரூரில் சிபிசிஐடி விசாரணை நிறைவு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
CBCID investigation completed in Karur

கரூரில் சிபிசிஐடி போலீசார் 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சோதனை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு 14 தனிப்படைகள் அமைத்து இந்தியா முழுவதும் தேடிவந்த நிலையில் இன்று காலை முதல் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

CBCID investigation completed in Karur

இன்று கரூர் மணல்மேடு அடுத்துள்ள கூலிநாயக்கனூர் என்ற இடத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், பெட்ரோல் பங்க் ஊழியருமான யுவராஜ் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இந்தச் சோதனையானது நடைபெற்றது. அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பேரூர் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும்  புதூர் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனையானது நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடத்திய விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரத யாத்திரை; ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Ratha Yatra Heavy traffic in ECR

ரத யாத்திரையால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 44வது ஆண்டு விழாவாகப் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (07.07.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 03.30 மணி அளவில் பலவாக்கத்தில் ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரைந்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கிழக்கு கடற்கரைச் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 

Next Story

எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
MR Vijayabaskar house CBCID raids Important documents seized

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி போலி ஆவணங்கள் பதித்து 22 ஏக்கர் நிலத்தை பறித்து கொண்டதாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் என 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலி ஆவணங்கள் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடும் என்று நினைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், இரண்டு முறை கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் எம்.ஆர். விஜயபாஸ்கர் தங்கியிருக்கும் வீடு, அலுவலகம் என அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் இன்று (07.07.2024) சிபிசிஐடி காவல்துறை சோதனை நடத்தினர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் பென்டிரைவ் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் (05.07.2024) எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 3 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.