Skip to main content

“தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” - ராஜினாமா செய்த ரிஷி சுனக் உருக்கம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
I take responsibility for the failure Resigned Rishi Sunak 

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி 411க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது.

இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் பின்னடைவு அக்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரதமராக புதிதாக பதவியேற்க உள்ள கியர் ஸ்டார்மருக்கு ரிஷி சுனர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பிரதமர் பதவியையும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியையும் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் பிரதமர் பதவியையும்  ரிஷி சுனக் இழந்தார். மேலும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தனது கடைசி உரையை டவுனிங் தெருவுக்கு வெளியே ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டிற்கு நான் முதலில் மன்னிபபு கேட்க விரும்புகிறேன். நான் இந்த பணிக்காக என் அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன். ஆனால் நீங்கள் இங்கிலாந்து அரசாங்கம் மாற வேண்டும் என நினைத்துள்ளீர்கள். இந்த தீர்ப்பு உங்களுடையது என்று தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளீர்கள். இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ரிஷி சுனக் இந்தியத் தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரிட்டன் எம்.பி.யாக உமா குமரன் தேர்வு; முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Uma Kumaran elected as British MP Greetings from CM MK Stalin

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்குப் பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.

இதனையடுத்து பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்தது. இதன் மூலம் தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த அறிவிப்பில் பிரதமராகப் பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றுக் கொண்டார். அதே சமயம் இந்த் தேர்தலில் தமிழ் பெண்ணான உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

Uma Kumaran elected as British MP Greetings from CM MK Stalin

இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உமா குமரன் தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பிரிட்டன் மீண்டு வரும்” - கெய்ர் ஸ்டார்மர் உரை!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Britain will come back to live up to the people's faith Keir Starmer speech

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது.

இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் பின்னடைவு அக்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரதமராக புதிதாக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு ரிஷி சுனர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அறிவிப்பில் பிரதமராகப் பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்துள்ளார். 

Britain will come back to live up to the people's faith Keir Starmer speech

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மர் தனது முதல் உரையை ஆற்றினார். அதில், “மாற்றத்திற்கான பணி உடனடியாகத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை, நாங்கள் பிரிட்டனை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்பதில் சந்தேகமில்லை. புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே மக்களின் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப பிரிட்டன் மீண்டு வரும். ஆட்சி அமைக்குமாறு மன்னர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன். நாம் ஒற்றுமையாக சேர்ந்து முன்னேற வேண்டும். எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து சேவை செய்வேன்” எனத் தெரிவித்தார்.