Skip to main content

சாதாரண நெல் வியாபாரியாக இருந்தவர் ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதி! நம்பி  ஓட்டு போட்ட மக்கள்.......

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
road


உச்சி வெயில் மண்டைய உடைக்க ரேசன் அரிசிசையை கோணி பையில் வாங்கிக் கொண்டு தட்டுத் தடுமாறிக் கொண்டு, குண்டும் குழியுமான சாலையில் புலம்பிய படியே சென்றார்கள் சைக்கிளிலும் நடந்தும் சென்ற அப்பாவி மக்கள்.

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்தாங்கி திடல், கூட நடமங்கை, ஆட்டுக்கால் மடப்புரம் உள்ளிட்ட கிராமத்து வயதான மக்கள் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிற மொழையூர் ரேசன் கடைக்கு போவோரும் வருவோம் தான் அவர்கள். 

 

அந்த வழியாக சென்ற நாம்  அவர்களிடம் விசாரித்தோம், " எங்க தொகுதி எம்.எல்.ஏ அ.தி.மு.க வை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அதோ பக்கத்து பஞ்சாயத்தான ஆனதாண்டவபுரம் தான் அவரு ஊரு. சாதாரன நெல் வியாபாரியா இருந்தாரு. பிறகு கவுன்சிலர் ஆனாரு. முன்னால் அமைச்சர் ஜெயபாலோட ஒட்டிக்கிட்டே இருந்தார். அவரு தனக்கு ஒ.எஸ், மணியனை எதிர்த்து அரசியல் செய்ய ஆள்வேனும்னு எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுத்தார். எங்களிடம் ஓட்டுக் கேட்கும் போது எப்போதுமே உங்க ஊரு புள்ளத்தான், உங்க நெல் வியாபாரிதான் எப்படி என்னை நம்பி நெல் கடனா கொடுப்பீங்களோ அது மாதிரி எனக்கு ஓட்டு போடுங்க. உங்க நெல்ல வித்துவிட்டு சொன்ன நேரத்தில் பணத்த எப்படி கொடுத்தேனோ அது போல நீங்க போடுற ஓட்டுக்கு விசுவாசமான கடனாளியா இருப்பேன்னார்.

 

ro

 

எம்.எல்.ஏ ஆனதும் ஆளே மாறிட்டார். அவர பார்க்கவே அனுமதிக்க மறுக்கிறார். ரேசன் பொருள் வாங்க 3 கிலோ மீட்டர் இந்த பாடாவதியான ரோட்டுல போக வேண்டியிருக்கு, ரேசனுக்கு போகணும்னா ஒரு நாள் வேளைக்கு போகாம இருக்கனும். ரேசனுக்கு போவதற்காக வீட்டுக்கு வீடு சைக்கிள் வச்சிருக்கோம், போயி வருவதுக்குள்ள டயர் பஞ்சராகிடும். சரியான நேரத்துக்கு ரேசன் வாங்க போகலன்னா அந்த மாதம் ரேசன் இல்லன்னுடுவாங்க. ரோட்ட சரி பண்ணி கொடுங்கன்னு கேட்டு பல முறை அவர் வீட்டு வாசலில் நின்னுட்டோம், உங்க ஊருக்கு ரோடு போட்டா காண்ட்ராக்டருக்கு நஷ்டம் வரும்னு சொல்லுறாரு.

 

பள்ளிக்கூடத்துக்கோ கல்லூரிக்கோ, ஊர் பயணம் போகனும்னா சோழ சக்கர நல்லூர் தான் போகனும். புள்ளைங்க தினசரி போய் வீட்டுக்கு வருவதுக்குள்ள உசுரே கையில் இருக்காது. போன வாரம் ஒரு வயதானவனின் சைக்கிள் டயரில் ஜல்லி குத்தி வெடிச்சி வாய்க்காலில் விழுந்துட்டாரு, 10 நாட்களுக்கு முன்னாடி 7 வகுப்பு படிக்கிற பொண்ணு விழுந்துடுச்சி. எப்போதுதான் எங்களுக்கு விடிவு காலம் வருமோ "வேதனையோடு மீண்டும் சைக்கிளில் ஏரி சென்றார்.

 

சாதாரன நெல் வியாபாரியாக இருந்தவர் இன்று ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதியாகி விட்டார். ஆனால் நம்பி  ஓட்டு போட்ட மக்களை கண்டுக்காமல் விட்டு விட்டார் அவர்கள் 3 கிலோ மீட்டர் செல்லும் போது புலம்பும் புலம்பல் சும்மா விடாது.

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தை நடமாட்டம்; 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Leopard movement; Holiday notification for 9 schools

இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இரண்டு நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை தீயணைப்புத் துறையினர் என மொத்தம் 61 பேர் சிறுத்தை தேடுதல் வேட்டையில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி நாளை (04/04/2024) அந்த  உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டுவிடும் என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘ஆபாச வீடியோவை வெளியிடுவோம்’ - ஆதீனத்தை மிரட்டிய பா.ஜ.க மாவட்டத் தலைவர்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
 BJP district president threatens Adinath in mayiladurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த நிலையில், தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்டத் தலைவர் அகோரம், கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.