Skip to main content

இந்தியாவில் ஒரே கல்விமுறை சாத்தியமற்றது– கே.எஸ்.அழகிரி பேட்டி

Published on 13/09/2020 | Edited on 13/09/2020
The only education system in India is impossible - KS Alagiri interview

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செப்டம்பர் 13ந்தேதி நிகழ்ச்சி ஒன்றுக்காக திருவண்ணாமலை நகருக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார், பீகாரில் ரகுவன்பிரசாத் சிங் என்ற புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்துள்ளார். நான் எம்.பியாக இருந்தபோது நானும் அவரும் நண்பரானோம். ஆரம்பத்தில் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தார், பின்னர் ஆர்.ஜே.டி இயக்கத்தில் இணைந்தவர் அவருக்கு இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வு தமிழகத்தில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நம் குழந்தைகள் அச்சத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். இளைஞர்கள் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டும், அச்சம் ஒருபோதும் தீர்வாகாது. அவ்வையார் அச்சத்தை தவிர் என்றார்.

தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வு நமக்கு பொருந்தாது. நமது குழந்தைகள், குறிப்பாக கிராமப்புற குழந்தைகள் படித்தது வேறு, நீட் தேர்வு என்பது வேறு. நம் குழந்தைகள் படித்தது நீட் தேர்வில் வராது. ஒரேநேரத்தில் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரமுடியாது. இந்தியாவில் ஒரே கல்விமுறை சாத்தியமற்றது. பல்வேறு சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ள வாழும் மக்கள் உள்ள நாடு இது. மிகுந்த பொருட்செலவில் தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும், எந்த வித வசதியும் இல்லாத ஓட்டு பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கும் ஒரே மாதிரியான தேர்வு என்பது தேவையற்றது.

நீட் தேர்வு தேவையில்லை என்கிற மாநிலங்கள் அதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எங்கள் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி சொல்லியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தீர்க்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியுள்ளது வரவேற்கதக்கது. தமிழகரசு, மத்தியரசிடம் பேசி நம் மாநில எண்ணத்துக்கு கொண்டு வரவேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்தியரசு திட்டமான பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என எங்கள் கட்சி எம்.பி விஷ்ணுபிரசாத் ஆதாரபூர்வமாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் மீது மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளாட்சி துறை அமைச்சர், முதலமைச்சர் என யாரும் பதில் சொல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பதற்கு காரணம் நாடு முழுவதும் கற்கும் முறை, கற்பிக்கும் முறை வெவ்வேறாக இருக்கும்போது எப்படி ஓரே தேர்வை ஏற்றுக்கொள்ள முடியும். அப்படி செய்தால் புதிய கல்விக்கொள்கை காலப்போக்கில் குலக்கல்வியாக மாறிவிடும். இந்த கல்வி முறை ஏராளமான தொழிலாளர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், பொறியாளர்களை உருவாக்க முடியாது, ஏராளமான கூலிகளை வேண்டுமானால் உருவாக்கலாம், ஏராளமான மருத்துவர்களை உருவாக்க முடியாது.

சமூக பிரச்சனைகளை நான்கு அதிகாரிகள், நான்கு அரசியல்வாதிகள் எடுக்ககூடாது. கல்வியாளர்கள், ஊடகம், பொதுமக்கள் விவாதத்துக்கு பின்பு எடுக்க வேண்டும், அதனால் தான் நாம் எடுக்கவேண்டும்.

விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் விவகார விசாரணை சிபிசிஐடிக்கு பதில், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.