Skip to main content

உரிமையாளர் திட்டியதால் கோவித்து கொண்ட பச்சைக்கிளி அம்மன் கோவிலில் தஞ்சம்

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

a


கோவையில் உரிமையாளர் திட்டியதால் கோவித்து கொண்ட பச்சை கிளி அம்மன் கோவிலில்  தஞ்சம் அடைந்தது. ஒரு நாளுக்கு மேலாக அம்மன் சிலையில் அமர்ந்திருக்கும் கிளியை பொது மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

 

கோவை பாப்பநாய்க்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன். இவர் கடந்த ஒரு ஆண்டாக ஒரு பச்சை கிளியை வீட்டில் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை வெள்ளை அடிக்கும் பணியை செய்தார்.  இதற்கு இடையூறாக சுற்றி வந்த கிளியை முருகேசனின் மகன் திட்டி உள்ளார். இதனால் கோபம் அடைந்த கிளி வீட்டில் இருந்து பறந்து சென்றது.  இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் கிளி கிடைக்கவில்லை. இதனிடையே கோபித்து கொண்ட கிளி அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தது.

 

a

 

மாரியம்மன் சிலை மீது ஏறி அமர்ந்த கிளி அவ்விடத்தை விட்டு நகராமல் அதன் மீது அமர்ந்து உள்ளது. கோவில் பூசாரி அம்மன் சிலையை அலங்கரித்த போது கோவில் மண்டபதிற்கு சென்ற கிளி மீண்டும் அம்மன் சிலையின் வலது தோள்பட்டை  மீது வந்து அமர்ந்தது.

 

இது குறித்து அறிந்த முருகேசன் குடும்பத்தினர் வந்து அழைத்த போதும் செல்லாமல் சிலை மீதே அமர்ந்து வர மறுக்கிறது. இதனை தொடர்ந்து கோவில் பூசாரி ஹரிபிரசாத் அம்மன் சிலைக்கு மீனாட்சி அலங்காரம் செய்தும் கிளிக்கு தேவையான மிளகாய்,கொய்யா உள்ளிட்ட உணவுகளை கிளிக்காக வைத்து உள்ளார்.

 

a

 

ஒரு நாளுக்கு மேலாகியும் அம்மன் சிலையை விட்டு நகர மறுக்கும் கிளியை சுற்று வட்டார பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

'மோடிக்கு பிடித்தது தோசையா வடையா என்பது பிரச்சனை அல்ல; தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்? - கோவையில் ராகுல் காந்தி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'Whether Modi likes dosa or vada is not the problem; The question is what did he do to Tamil Nadu' - Rahul Gandhi's speech in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை, செட்டிபாளையத்தில்  திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ''நாடாளுமன்றத்தில் அதானி  பற்றி பேசிய போது என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பெரிய தத்துவ போராட்டம் நடக்கிறது. மோடி அரசு போக வேண்டிய நேரம் இது. மத்தியில் உள்ளது மோடி அரசு அல்ல இது அதானியின் அரசு. அதானி விரும்பியதால் சில மாதங்களில் மும்பை விமான நிலையம் அவரது கைக்குச் சென்றது. அதானியின் சலுகைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதால் என் மீது நடவடிக்கை பாய்ந்தது. எம்பி பதவி மட்டுமின்றி எனது வீட்டையும் பறித்தனர். இந்திய மக்களின் இதயத்தில் பல லட்சம் வீடுகள் எனக்கு உள்ளது. தமிழர்களின் வீடுகள் எனக்காக எப்போதும் திறந்திருக்கும். எனது வீட்டை எடுத்துக் கொண்ட போது கூட நான் கவலைப்படவில்லை. தமிழர்களுக்கு எனத் தனியாக வரலாறு இருக்கிறது. தமிழர் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை நீட். நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை, உங்கள் வசமே விட்டு விடுகிறோம். வேலைவாய்ப்பின்மையைப் போக்க, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை கொண்டு வருவோம். அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இங்கு வந்தால் தோசை பிடிக்கும் என்று கூறும் மோடி இங்கிருந்து சென்றதும் தமிழ் மீது தாக்குதல் நடத்துகிறார். தோசை மட்டுமல்ல மோடிக்கு வடையும் கூட பிடிக்கலாம். ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல. தமிழ் மொழி பிடிக்குமா என்பதே கேள்வி.  எங்கள் மொழி மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள் எனத் தமிழ் மக்கள் மோடியிடம் கேட்கிறார்கள். மோடிக்கு தமிழ்நாட்டை பிடிக்குமா? அப்படி என்றால் தமிழர்களுக்காக அவர் என்ன செய்தார். தமிழகத்தில் இருந்து வெளியே சென்றதும் ஒரே மொழி ஒரே நாடு என்று சொல்கிறார் மோடி''என்றார்.